கொரோனாவுக்கான அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி 100 சதவீதம் பலன் : ஆய்வில் தகவல்
No commentsMonday, 30 November 2020
7:31:00 pmமிருகத்தனமான, மனிதாபிமானமற்ற ஆட்சியை’ முடிவுக்கு கொண்டுவரப்படும் : அதிர்ந்து போன கம்யூனிஸ்ட் கட்சியினர்
No commentsதமிழகத்தில் இன்று 1,410 பேருக்கு கொரோனா உறுதி
No commentsஏழைகளும், மிகவும் வறுமை நிலையில் உள்ளோரும் அதிகாரம் பெற பணியாற்றியவர் மறைந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ
No commentsதங்கத்தின் விலைக்கு இணையாக தமிழகத்தில் மணல் விற்பனை செய்யப்படுகிறது : நீதிபதிகள் அதிருப்தி
No commentsகுழப்பும் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி : ரசிகர்களுக்கு டாட்டா கட்டிய ரஜினி..!
No commentsவிவசாயிகளின் நலனுக்காகவே புதிய வேளாண் சட்டங்கள் : பிரதமர் மோடி
No commentsவங்கக் கடலில் புதிய புயல் இன்று உருவாக உள்ளது : தூத்துக்குடியில் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
No commentsதி.மு.க., கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது
No commentsஅராஜகத்திற்கு மொத்த உருவமே திமுக : அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சனம்
No commentsஎனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கூறுகிறேன் - ரஜினி
No commentsமாவட்டச் செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்திற்காக, சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து ரஜினி புறப்பட்டபோது, அங்கிருந்த ரசிகர்கள் அவரது காரின் மீது பூத்தூவி வாழ்த்து தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து காரில் கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சென்ற ரஜினியை அங்கும் ரசிகர்கள் திரண்டு, பூத்தூவி வரவேற்றனர்.
மேலும் அரசியல் கட்சி துவங்குமாறு கூறி அவர்கள் முழக்கமிட்டனர். மண்டபத்திற்குள் சென்ற பிறகு காரில் இருந்து இறங்கி ரசிகர்களுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு ஆலோசனை நடைபெறும் அரங்கிற்கு ரஜினி சென்றார்.
ஆலோசனைக் கூட்டத்தில் 38 மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் என 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
ரஜினி ரசிகர்கள், மக்கள் மன்றத்தை சேர்ந்த பலர் அங்கு வந்திருந்தபோதும், அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டு மாவட்ட நிர்வாகிகள் மட்டுமே உள்ளே அனுப்பப்பட்டனர். பவுன்சர்களும் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.
ரஜினி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கட்சி தொடங்குவது, சட்டப்பேரவை தேர்தல் நிலைப்பாடு, தேர்தலில் போட்டியிட்டால் கிடைக்கக்கூடிய வாக்கு சதவீதம், வெற்றி வாய்ப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
ரஜினி தனது முடிவை நாளை காலைக்குள் அறிவிக்க உள்ளதாகவும், கட்சி தொடங்குவது குறித்தே கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும், ஆலோசனையில் பங்கேற்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்து, மண்டபத்தின் மாடத்தில் இருந்து ரசிகர்களை பார்த்து உற்சாகம் பொங்க மகிழ்ச்சியோடு ரஜினிகாந்த் கையசைத்தார்.
பின்னர் போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.
போயஸ் தோட்ட இல்லத்தின் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், அரசியல் கட்சி துவங்குவது தொடர்பாக மாவட்ட நிர்வாகிகள் தங்கள் கருத்துகளை கூறியதாகக் குறிப்பிட்டார்.
தான் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக நிர்வாகிகள் கூறியுள்ளனர் என்றும், தனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அறிவிப்பதாகவும் ரஜினி தெரிவித்தார்.
பெரும்பான்மையை நிரூபிக்கும்படி மம்தா பானர்ஜியிடம் ஆளுநர் கேட்க வாய்ப்பு உள்ளது : பாஜக எம்.பி. சவுமித்ர கான்
No commentsரஜினி புதிய கட்சி? மாலை அல்லது காலை அறிவிப்பு
No commentsபுதிய கட்சி துவங்குவது தொடர்பாக ரஜினி நடத்திய ஆலோசனை நிறைவு
புதிய கட்சி துவங்குவது குறித்து மாவட்டச் செயலாளர்களிடம் ரஜினி கருத்துகளை கேட்டறிந்தார்
மாவட்டச் செயலாளர்களை ரஜினி தனித்தனியாகவும் அழைத்து பேசியுள்ளார்
ரஜினி அரசியல் கட்சி துவங்கி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தியதாக தகவல்
கட்சி தொடங்குவது குறித்து தான் முடிவெடுப்பதாகவும், நிர்வாகிகள் கொடுத்த பணிகளை முழுமையாக செயல்படுத்தவும் ரஜினி அறிவுறுத்தல்
புதிய கட்சி துவங்குவது தொடர்பாக தற்போது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை - மாவட்ட நிர்வாகி
அரசியல் கட்சி துவங்குவது, அரசியலுக்கு ரஜினி வருவாரா? மாட்டாரா? என்பது குறித்து விவாதம் நடைபெற்றது - மாவட்ட நிர்வாகி
ரஜினியின் தற்போதைய உடல் நிலை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது - மாவட்ட நிர்வாகி
ரஜினி உடனடியாக கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தினோம் - மாவட்ட நிர்வாகி
புதிய கட்சி ஆரம்பிப்பது, அரசியலுக்கு வருவது குறித்து இன்று மாலை அல்லது நாளை காலை அறிவிப்பு வெளியாக வாய்ப்பு - மாவட்ட நிர்வாகி
புதிய கட்சி துவங்குவது, அரசியல் வருகை குறித்து ரஜினியே இன்று மாலை அல்லது நாளை காலை அறிவிப்பார் - மாவட்ட நிர்வாகி