அமைச்சரவைப் பிரிவின்படி, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் உத்தரவின் பேரில், அரசு விழாக்களில் சிவப்பு கம்பளங்களைப் பயன்படுத்துவதற்கான தடை நடைமுறைக்கு வரும்.
கடந்த சில ஆண்டுகளாக பணவீக்கம் மற்றும் பொருளாதார மந்தநிலையால் பாகிஸ்தான் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. நீண்ட இழுபறிக்குப் பிறகு எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி ஆட்சி அமைந்தது. அதன்படி ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக பதவியேற்றார்.
இவர் தலைமையில் 16 உறுப்பினர்களுடன் மத்திய அமைச்சர்கள் குழு கடந்த 11ம் தேதி புதிதாக அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து முதல் கூட்டம் நடந்தது. இதில், வெளிநாடுகளில் இருந்து பாகிஸ்தான் கடன் பெறும் சவாலான சூழல் அதிகரித்துள்ள நிலையில், இதுகுறித்து பிரதமர் ஷெரீப் கூறும்போது, நட்பு நாடுகளிடம் இனி கடன் கேட்க மாட்டார். ஆனால் வெளிநாட்டுத் தூதுவர்களிடம் முதலீடுகளைச் செய்யச் சொல்வேன் என்று கூறியுள்ளேன் என்றார்.
நமக்குள் சண்டையிடுவதை விடுத்து, வறுமைக்கு எதிராக போராட வேண்டும் என்றும் அவர் கூறினார். இக்கூட்டத்தில், வசதி படைத்தவர்களுக்கான மானியத்தை நிறுத்துவது, மொத்த வியாபாரிகளை வரி விதிப்புக்குள் கொண்டு வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்த சந்திப்பின் போது, சர்வதேச நாணய நிதியத்தை சார்ந்திருப்பதில் இருந்து விலகி இருப்போம் என்றும், பாகிஸ்தானை வெளிநாட்டு கடனில் இருந்து மீட்பதில் உறுதியாக உள்ளோம் என்றும் கூறினார்.
இந்நிலையில், பண நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானில் செலவுகளைக் குறைக்கும் நோக்கில், தேவையற்ற செலவுகளை நிறுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி அரசு விழாக்களில் சிவப்பு கம்பளங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் வருகையின் போது, அவற்றின் பயன்பாடு நிறுத்தப்படும்.
பிரதமர் ஷெரீப்பின் உத்தரவின் பேரில் இந்தத் தடை அமலுக்கு வருவதாக அமைச்சரவைப் பிரிவு தெரிவித்துள்ளது. இருப்பினும், அரசாங்க நடைமுறையின்படி, வெளிநாட்டு தலைவர்களை சந்திக்கும் போது சிவப்பு கம்பளங்கள் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த சிக்கன நடவடிக்கை பணத்தை மிச்சப்படுத்தும் மற்றும் பொது நிதிகளை பொறுப்புடன் செலவழிக்கும் நோக்கத்தை செயல்படுத்தும்.
பாகிஸ்தானின் பொருளாதார மீட்சியின் ஒரு பகுதியாக, பிரதமரும், அமைச்சரவை உறுப்பினர்களும் தானாக முன்வந்து சம்பளம் மற்றும் பிற சலுகைகளை விட்டுக் கொடுப்பதாக கடந்த வாரம் முடிவு செய்யப்பட்டது. அதேபோல், பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியும் தனது சம்பளம் மற்றும் இதர சலுகைகளை கைவிட முடிவு செய்துள்ளார்.
AthibAn Tv