Type Here to Get Search Results !

அறிக்கை விட்டு அழிக்க முடியுமா கொரோனா அரக்கனை?: கட்சிகளைச் சாடிய பிரபல நடிகை




சென்னை: அறிக்கை விட்டு அழிக்க முடியுமா கரோனா அரக்கனை? என்று தமிழக கட்சிகளை பிரபல நடிகை ஒருவர் விமர்சித்துள்ளார்.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 13,495  பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 448 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்திலும் தற்போது வரை கரோனாவால் 1,323 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 11 பேர் மரணமடைந்துள்ளனர்.  
மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு  முதல் இந்த மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த உத்தரவு மே மாதம் 3-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அறிக்கை விட்டு அழிக்க முடியுமா கொரோனா அரக்கனை? என்று தமிழக கட்சிகளை பிரபல நடிகை ஒருவர் விமர்சித்துள்ளார்.
பிரபல நடிகை கஸ்தூரி இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
அறிக்கை விட்டு அழிக்க முடியுமா கொரோனா அரக்கனை? அண்டை மாநிலத்தில் - 100 முனைப்பு, 0 இறப்பு. 100% வெற்றி, 0 விளம்பரம். அதிகம் பேசவில்லை பினராயி விஜயன். அனைத்தும் செயலில் காட்டுகிறார். தமிழக தலைவர்கள் சுயவிளம்பரத்தை விடுத்து சுயகட்டுப்பாட்டை வளர்த்தால் மட்டுமே  நமக்கு விடிவு!
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    கருத்துரையிடுக

    0 கருத்துகள்
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

    Top Post Ad

    Below Post Ad

    Ads Bottom