Type Here to Get Search Results !

விஜயதாரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அமைச்சர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்...



பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளாலும், மக்கள் நலத்திட்டங்களாலும் பாஜகவில் இணைந்ததாக விஜயதாரணி கூறினார்.

விஜயதாரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இன்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜகவில் இணைந்த சகோதரி விஜயதாரணியை வரவேற்பதாக கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் விஜயதாரணி கூறியதாவது:

நான் சிறுவயதில் இருந்தே காங்கிரஸில் அங்கம் வகித்து வருகிறேன். தற்போது மீண்டும் தேசிய கட்சியான பாஜகவில் இணைந்துள்ளேன். மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளாலும், மக்கள் நலத்திட்டங்களாலும் பாஜகவில் இணைந்தேன்.

தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக வலுவாக காலூன்ற வேண்டும். தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்துவோம். அண்ணாமலை தலைமையில் தமிழகத்தில் பாஜக சிறப்பாக வளர்ந்து வருகிறது. பாஜகவில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை பாஜக நிறைவேற்றியுள்ளது. பாஜக தொடர்ந்து பெண்களை ஊக்குவித்து வருகிறது என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom