Type Here to Get Search Results !

விவசாய நலத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் : முதல்வர் சிவராஜ்சிங் சவுகான்



விவசாயிகள் நலத்திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் ரூ.10 ஆயிரம் பெறுவார்கள் என ம.பி., முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார்

இது குறித்து கூறப்படுவதாவது: ம.பி., மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. காங்கிரஸ் கட்சியில் பிரிந்து சென்ற ஜோதிர் ஆதித்யா சிந்தியா மற்றும் அவரது ஆதரவாளர்களால் ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து பா.ஜ.கவை சேர்ந்த சிவராஜ்சிங்சவுகான் முதல்வராக பதவியேற்றார். இருப்பினும் அவரால் நலத்திட்டங்கள் செயல்படுத்தமுடியாமல் இருந்து வந்தது.

இதனிடையே மாநிலத்தில் இடைதேர்தல் நடைபெற்றது. இதில் ஆட்சிக்கு தேவையான பெரும்பான்மை பா.ஜ.,வுக்கு கிடைத்தது. தொடர்ந்து செஹோர் என்னுமிடத்தில் பா.ஜ.க தொண்டர்களுக்கான பயிற்சி திட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கலந்து கொண்டார்.

அவர் கூறியதாவது: மக்களுக்கு சேவை செய்வதில் இருந்து பா.ஜ.க ஒரு போதும் விலகுவதில்லை. தற்போது ஆட்சிக்கு பெரும்பான்மை கிடைத்து உள்ளதால் அனைத்து திட்டங்களையும் திரும்ப துவங்குவேன். முதல்வரின் விவசாய நலத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom