காஷ்மீர் பிரசார பயணத்தின் போது, மாநில அந்தஸ்து குறித்தும், அங்கு சட்டசபை தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பது குறித்தும் பிரதமர் மோடி சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 2019 இல் ரத்து செய்யப்பட்டது, அதைத் தொடர்ந்து காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. அதன் பிறகு அங்கு எந்த அரசியல் நடவடிக்கையும் நடைபெறவில்லை.
பிரதமர் மோடி: இதனிடையே, காஷ்மீரில் சட்டசபை தேர்தல் எப்போது நடைபெறும், காஷ்மீருக்கு மீண்டும் எப்போது மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்பது குறித்து பிரதமர் மோடி சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நிலையில், அவரது கருத்து விமர்சனத்துக்குரியதாக கருதப்படுகிறது.
காஷ்மீரில் எப்போது தேர்தல்: காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "மோடி ஒரு முன்னோக்கு சிந்தனையாளர். இதுவரை நடந்தது டிரெய்லர் மட்டுமே. புதிய ஜம்மு-காஷ்மீரை உருவாக்குவதில் நான் மும்முரமாக இருக்க வேண்டும். .சட்டசபை தேர்தலுக்கான நேரம் வெகு தொலைவில் இல்லை, விரைவில் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும்.. இதன் மூலம் உங்கள் கனவுகளை உங்கள் MLA மற்றும் அமைச்சர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்
தீவிரவாதம், பிரிவினைவாதம், கல் வீச்சு, மறியல், எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்ற பயம் இல்லாமல் தலைமுறை தலைமுறையாக காஷ்மீரில் தேர்தல் நடக்கப் போகிறது. இங்கு வைஷ்ணோ தேவி மற்றும் அமர்நாத் யாத்ரீகர்களின் பாதுகாப்பு குறித்து கவலைகள் எழுந்தன. ஆனால் தற்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. ஜம்மு காஷ்மீர் அரசு மீது மக்கள் நம்பிக்கை அதிகரித்துள்ளதால், வளர்ச்சி கண்டு வருகிறது.
கவலையில்லை: நாட்டின் பெரும்பான்மையான மக்களின் உணர்வுகள் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கவலைப்படவில்லை. மக்களின் உணர்வுகளுடன் விளையாடுவதே இவர்களின் வேலை. நீதிமன்றத்தால் தண்டனை பெற்று ஜாமீனில் இருக்கும் ஒருவரின் வீட்டுக்குச் சென்று சிவராத்திரியின் போது ஆட்டிறைச்சி சமைத்து நாட்டு மக்களைக் கிண்டல் செய்து வீடியோ எடுக்கிறார்கள். இங்கு சட்டம் யாரையும் எதையும் சாப்பிடுவதைத் தடுக்கவில்லை.. ஆனால் இவர்களுக்கு வேறு யோசனை.
முகலாயர்கள் இங்கு தாக்கியபோது, முகலாயர்கள் கோயில்களை இடிக்கும் வரை திருப்தியடையவில்லை. “முகலாயர்களைப் போல, நாட்டு மக்களைக் கிண்டல் செய்வதில்தான் திருப்தி அடைகிறார்கள்” என்று காங்கிரஸைப் பார்த்துக் கேலி செய்தார்.
ராமர் கோவில்: ராமர் கோவில் குறித்து தொடர்ந்து பேசிய அவர், ''பா.ஜ.,வுக்கு ராமர் கோவில் தேர்தல் பிரச்னையாக இருந்ததில்லை.. எதிர்காலத்தில் தேர்தல் பிரச்னையாக மாறாது.. பா.ஜ., உருவாவதற்கு முன்பே ராமர் கோவில் போராட்டம் நடந்தது. வெளிநாட்டு படையெடுப்பாளர்கள் நமது கோவில்களை அழித்தபோது, இந்திய மக்கள் "சமய இடங்களைக் காப்பாற்றப் போராடினார்கள். காங்கிரஸ் தலைவர்கள் பெரிய பங்களாக்களில் வசித்து வந்தனர். ஆனால் அவர்களால் ராமருக்கு கோயில் கட்ட முடியவில்லை” என்று சேடி கூறினார்.
AthibAn Tv