விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் வரும் 21ம் தேதி நடக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இன்று காலை 9.55 மணிக்கு மேல் 10.19 மணிக்குள் மிதுன லக்னத்தில் சுவாமி சன்னதியில் கொடிமரம் ஏற்றப்படும்.
அன்று முதல் மீனாட்சி-சுந்தரேசுவரர் சுவாமி காலை, இரவு என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருவார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 19ம் தேதி மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகமும், 20ம் தேதி திக்கு விழாவும் நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் வரும் 21ம் தேதி நடக்கிறது. அன்று காலை 8 மணி முதல் 9 மணிக்குள் மேற்கு, வடக்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருமண மண்டபத்தில் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நடைபெறும். திருக்கல்யாணத்தை காண ஆன்லைன் முன்பதிவு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 22ம் தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா வரும் 23ம் தேதி தீர்த்தவாரியுடன் நிறைவடைகிறது.
AthibAn Tv