Type Here to Get Search Results !

இஸ்ரேல்-ஈரான் மோதல் உலகப் போருக்கு வழிவகுக்கும்... டிரம்ப் எச்சரிக்கை

 இது அமெரிக்காவிற்கு மிகவும் ஆபத்தான நேரம் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம், சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் முக்கிய அதிகாரிகள் 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, இஸ்ரேலுக்கு ஈரான் விரைவில் பதிலடி கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இஸ்ரேல்-ஈரான் மோதலால் உலகப்போர் ஏற்படும் அபாயம் உள்ளதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்காவுக்கு இது மிகவும் ஆபத்தான காலம் என்றும், அமெரிக்காவில் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ள அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, குறிப்பாக தற்போதைய திறமையற்ற தலைவர்களின் ஆட்சியில் எதுவும் நடக்கலாம் என்றும் கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom