ஈரான் தூதரகம் மீதான தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே பல ஆண்டுகளாக நிழல் போர் நடந்து வருகிறது. இப்போது காசா மீதான இஸ்ரேலிய இராணுவத்தின் தாக்குதலுக்கு எதிராக ஈரானிய ஆதரவு ஹிஸ்புல்லா (லெபனான்) அமைப்பு இஸ்ரேலை தாக்குகிறது. மேலும், ஏமனின் ஹூதி கிளர்ச்சிக் குழு மற்றும் சிரியாவில் ஈரான் ஆதரவு கிளர்ச்சிக் குழுவும் இஸ்ரேலை குறிவைத்து வருகின்றன. பதிலடியாக இஸ்ரேலும் தாக்குகிறது.
இந்நிலையில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரான் துணைத் தூதரகம் மீது கடந்த 1ம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டு வெடித்ததில் ஈரான் ராணுவத்தைச் சேர்ந்த 2 மூத்த தளபதிகள், சிரியாவைச் சேர்ந்த 4 மற்றும் ஹெஸ்புல்லாவைச் சேர்ந்த ஒருவர் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது குற்றம் சாட்டிய ஈரான், பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
ஈரான் தூதரகம் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி இன்று மீண்டும் சூசகமாக தெரிவித்துள்ளார். மேற்கத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இஸ்ரேலை இந்தப் பேரழிவை ஏற்படுத்துவதைத் தடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் செய்யவில்லை. அவர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றவில்லை என்றும் அவர் கூறினார்.
இஸ்ரேல் பதிலடி கொடுத்துள்ளது. ஈரான் தனது எல்லையில் இருந்து இஸ்ரேலை தாக்கினால் அதற்கு தக்க பதிலடி கொடுத்து நேரடியாக ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
AthibAn Tv