11 மாவட்டங்களில் ராமநவமி யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது நியாயமானது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ராம நவமியையொட்டி நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 17ம் தேதி வரை கேரள மாநிலத்தில் இருந்து கன்யாகுமரி மாவட்டம் களியக்காவிளைக்கு பாதயாத்திரை செல்ல அனுமதிக்க வேண்டும் என ஸ்ரீஆஞ்சநேயம் அறக்கட்டளை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த மனுவில், "நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக கன்யாகுமரிக்கு யாத்திரை செல்ல அனுமதி கோரி மனு கொடுத்துள்ளோம். ஆனால், தமிழக அரசு சட்டத்தை காரணம் காட்டி அனுமதி வழங்க மறுக்கிறது.
இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தபோது, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி விளக்கமளித்தார். , இப்போது தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அனுமதி கோருகிறது."
இதையடுத்து நீதிபதி, ''11 மாவட்டங்களில் யாத்திரைக்கு அனுமதி மறுத்தது நியாயமானது. மனுதாரர் தரப்பில், கன்யாகுமரி மாவட்டத்தில் மட்டும் யாத்திரையை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ""கன்யாகுமரிக்கு யாத்திரை செல்ல அனுமதி கோரி மனுதாரர் விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தை அரசு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்,'' என உத்தரவிட்டார்.
AthibAn Tv