Type Here to Get Search Results !

மோடி என்ன செய்தார் என்று கேட்கும் தமிழ்நாட்டு மேதைகளுக்கு.... இதே பதில்...!


நான் சொல்வதில் உங்களுக்கு நம்பிக்கை இருக்க வாய்ப்பில்லை என்று தெரியும்... நீங்கள்தான் படித்த அறிவாளிகள் ஆயிற்றே...

நீங்கள் உண்மையிலேயே அறிவாளிகள் தான் என்றால் நான் சொல்வதை தயவு செய்து சமூக வலைத்தளங்களில் தேடி பாருங்கள் நான் சொல்வது உண்மையா பொய்யா என்று...

கை வலிக்க எழுத எனக்கு ஒன்றும் கவலை இல்லை...உண்மையை சொல்லி சிலருக்கு புரிய வைப்பதில் எந்த ஒரு வலியும் என்னை காயப்படுத்தாது...

மோடி செய்த அனைத்தையும் சொல்ல முடியாது அதற்கான நேரமும் போதாது என்னால் முடிந்த அளவுக்கு பிரதமர் அவர்கள் செய்த நன்மைகளை உங்களுக்கு தெரியப்படுத்துறேன்...

1. ராமேஸ்வரம் முதல் கரிச்சல் முனை வரை நீண்ட காலமாக கைவிடப்பட்ட தனுஷ்கோடி வழியாக தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது...

2. ராகுல் காந்தி குடும்ப தொகுதியான அமேதியில்(தற்போது அத்தொகுதி ஸ்மிருதி ராணி யுடையது) AK 203 ரக துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலை...

3. இந்தியாவில் மிக உயரமான பாலம் IMPHAL(இம்பால்), JIRIBAM(ஜிரிபாம்) மற்றும் TUPUL(துப்புல்) - ஆகியவற்றை அஸ்ஸாமிற்கும் அருணாசலப் பிரதேசத்திற்கும் இடையே அமைக்கப்பட்டுள்ளது...

4. வெளிநாடுகளில் கைதான ஏராளமான இந்தியர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டது... இதில் சவுதி அரேபியாவில் மட்டும் 850 கைதிகளை விடுதலை செய்துள்ளது...

5. சவுதி அரேபியாவில் 7,00,000 கோடி முதலீடு செய்துள்ளது...

6. செல்போன் உற்பத்தி, கிட்டத்தட்ட அனைத்து தயாரிப்பையும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட தொழிற்சாலைகள்🏭  அமைப்பு...இதனால் இறக்குமதி குறைந்து விட்டது... 

7.  காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்கள் அனைவருக்கும் அரசு வழங்கிய பாதுகாப்பு வாபஸ் செய்யப்பட்டது...
இது வரை எந்த தலைவரும் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்தது கிடையாது...

8. புதிய வீடு கட்டுவதற்கு 2.27 லட்சம் வட்டி மானியம்...

9. 2022 க்குள் அனைவருக்கும் வீடு என்ற இலக்கில் நல்ல முன்னேற்றம்...

10. புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி 35.5 GW யிருந்து 69.7 GW வரை உயர்ந்து இரட்டிப்பானது...

11. UDAY(உதய்) மின் திட்டத்தின் மூலம் 20,000 கோடி வட்டி சேமிப்பு...

12. மி‌ன் பற்றாக்குறையில் இருந்த நம் நாடு தற்போது அதிக அளவில் மின் உற்பத்தி செய்து அண்டை நாடுகளுக்கு விற்பனை...

13. உலகத்திலேயே முதன் முதலாக டீசல் ரயில் என்ஜின் 🚂, மின்சார ரயில் என்ஜினாக மாற்றப்பட்டது...கூடிய விரைவில் அனைத்து ரயில் பாதையும் மின்சார மயமாகும்... 

14.  ரயில்வே மூல தன செலவு 2.3 கோடியில் இருந்து 5.1 லட்சம் கோடியாக அதிகரிப்பு...

15. 1997 - 98 ஆம் வருடத்தில் ஆரம்பிக்கப்பட்ட போகிபீல் இரட்டை அடுக்கு பாலம் இப்போது முடிக்கப்பட்டு பயண தூரம் 700 கி.மீ. தூரம் குறைக்கப்பட்டுள்ளது... பயண நேரமும் 24 மணியிலிருந்து வெறும் 5 மணி நேரமாக குறைப்பு...

நம்மூர்லதான் சீக்கிரமா போயிட்டு வர்றதுக்கு நாங்க என்ன வப்பாட்டி வீட்டுக்கா போறோம்னு கேள்விய கேப்பான்...

16. 15,700 கோடி செலவில் பெங்களூருக்கு புறநகர் ரயில் சேவை....

17. ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் தலைநகரங்களில் அகல ரயில் பாதை மூலம் கௌஹாத்தி மட்டுமே இணைக்கப்பட்டு இருந்தவை தற்போது இட்டா நகரும், அகர்தலாவும் இணைக்கப்பட்டுள்ளது.. . மற்ற தலைநகரங்களும் இணைக்கும் வேளை மும்முரமாக நடந்து வருகிறது...

18.  விவசாயிகளுக்கு கோடி கணக்கான மண் வள அட்டை வழங்கும் திட்டம்...

19. ரஷ்யாவில் இருந்து அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி S-400 ஏவுகணைகள் வாங்கியது...

20. பாரத்மாலா திட்டம் முதல் கட்டமாக 50,000 கி.மீ. சாலைகள்... இரண்டாம் கட்டத்தில் 30,000 கி.மீ. சாலைகள்...

21. சாகர்மாலா திட்டத்தில் (வாஜ்பாய் உருவாக்கிய) 12 முக்கிய துறைமுகங்கள் தரம் உயர்த்துதல் மற்றும் 185 பழைய புதிய சிறிய துறைமுகங்கள் உருவாக்குதல் மற்றும் அதன் தரம் உயர்த்துதல்...

22. அனைத்து துறைமுகங்களுக்கு அருமயான ரயில் மற்றும் சாலை போக்குவரத்து இணைப்புகள்...

23. சரக்கு போக்குவரத்துக்கு தனியாக 3,300 KMs.
இதனால் சரக்கு போக்குவரத்தின் வேகம் அ‌திக‌ரி‌க்கு‌ம். 2.5 மடங்கு சரக்கு அதிகமாக கையாளப்படும். பயணிகளின் ரயில் தாமதம் தவிர்க்கப்படும். விபத்துக்கள் குறையும். இத்திட்டம் நிறைவேற 2022 ஆம் வருடம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

24. பல ஆண்டுகளாக எதிர்ப்பார்க்கப்பட்ட கிழ‌க்கு கட‌ற்கரை சாலை‌ விரிவாக்கம் (ECR)...

25. கன்னியாகுமரி மாவட்டத்தில் சாமி தோப்பில் பசுமை விமான நிலையம்...

26. கன்னியாகுமரியில் கட்டவே முடியாது, கட்டிய பிறகு எதிர்கட்சிகள் கிளப்பி விட்ட ஆடுது தனியா ஓடுது உடையுது என்று சொல்லப்பட்ட போக்குவரத்து மேம்பாலங்கள்...

27. கும்ப மேளாவில் வேலை செய்த துப்புரவு தொழிலாளர்களுக்கு அவர்களுடைய நன்மைக்காக தனது சொந்த சேமிப்பில் இருந்து 21 லட்சம் ரூபாய் வழங்கினார் பாரத பிரதமர் மோதி ஜீ...

28. சியோல் அமைதிக்கான பரிசுத் தொகை 1.3 கோடி நமாமி கங்கை திட்டத்துக்கு வழங்கினார் மோதி ஜீ...

29. பிரதமருக்கு வழங்கப்பட்ட நினைவு பரிசுகளை ஏலம் விட்டதில் கிடைத்த 3.4 கோடியையும் நமாமி கங்கை திட்டத்திற்கு வழங்கினார்... 2015 வரை தனக்கு கிடைத்த நினைவு பரிசுகள் ஏல தொகை 8.33 கோடி ரூபாயையும் கங்கை சுத்தப்படுத்தும் திட்டத்துக்காக வழங்கினார்...
ஒரு நிர்வாகி எப்படி இருக்க வேண்டும் என்று இவரை பார்த்து கற்று கொள்ளுங்கள்...

இவை தனக்கு கிடைத்த பணத்தை வழங்கியது... மக்களுடைய வரிப்பணத்தை மிச்சப்படுத்துவதில் கண்ணும் கருத்துமாக விளங்குபவர்...

30. மேலும் குஜராத் அரசு ஊழியர் பெண் குழந்தைகள் படிப்பு செலவுக்கு தனது சேமிப்பில் இருந்து 21 லட்சம் வழங்கினார்...

31. மோதி ஜீ தான் முதல் அமைச்சராக இருந்த போது கிடைத்த அனைத்து பரிசு பொருட்களையும் ஏலம் விட்டதில் கிடைத்த 89.96 கோடி ரூபாயையும் KANYA KELAVANI fund(நிதி) பெண் குழந்தைகளின் படிப்புக்கான திட்டத்திற்கு வழங்கினார்...
மொத்தமாக 100 கோடி ரூபாய்க்கும் மேல் சொந்த முயற்சியில் வழங்கி இருக்கிறார்... வாஜ்பாய், அப்துல் கலாம் போன்ற சில தலைவர்களே வாங்காமல் கொடுத்து மட்டுமே வாழ்ந்து வந்தார்கள். தற்போது அவர்களுக்கு அடுத்தபடியாக மோதி ஜீ மட்டுமே நடந்துக் கொள்கிறார்...

32. பிரதம மந்திரியின் இல்லத்தில் மற்றும் அலுவலகத்தில் தனது உணவு செலவை தானே ஏற்றுக் கொள்கிறார்...முக்கியமாக அவருடைய உடைக்கான செலவு எதையும் அரசாங்கம் செய்தது இல்லை.... உடையையும் ஏலத்தில் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை ஏழைகளுக்கு அளிக்கின்றார்... 

சரி கொஞ்சம் அவர் செய்த திட்டத்தையும் சொல்லிட்டு போறேன்... 

33. சென்னை மதுரை இடையேயான இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி... ரயில் பாதை போலவே நீண்டு கொண்டு இருந்த வேலைகள் தற்போது முடிக்கப்பட்டது...

34. போதனுர், பொள்ளாட்சி, திண்டுக்கல் மற்றும் பாலக்காடு இடையேயான 🚊 ரயில் பாதை பணியில் தொய்வுகள் நீக்கப்பட்டு அகல ரயில் பாதை பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன...

35. புதிய புனலூர் மற்றும் செங்கோட்டை இடையேயான அகல ரயில்பாதை திட்டம், பயனில் இருந்த மிக குறுகிய ரயில் 2008 இல் நிறுத்தப்பட்டு 2014 வரை பணிகள் ஏதும் நடக்காத நிலையில், ஆட்சிக்கு வந்த பிறகு வேலையை மும்முரமாக செய்து 2018 இல் இங்க ரயிலை ஓட வைத்த பெருமை மோதி ஜீயையே சாரும்...

36. மிக பெரிய இடைஞ்சலாக இருந்த அரக்கோணம் - தக்கோலம் இடையேயான 20 வருடமாக இழுத்துக் கொண்டு இருந்த வெறும் 7 கி.மீ. தூரத்திற்கான மின்மயமாக்கும் பணி 2019 ஜனவரியில் நிறைவு செய்யப்பட்டது...

37. மயிலாடுதுறை - காரைக்குடி இடையேயான ரயில் பாதை 150 கி.மீ. அகலப்படுத்தும் வேலை... 2008 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த பணி 2014 இல் வெறும் 38 கி.மீ. வேலையே முடிக்கப்பட்டது... பணம் இல்லாமல் தொய்வாக இருந்த பணி பணம் ஒதுக்கப்பட்டு 100 கி.மீ. பணி முடிக்கப்பட்டது. மிச்சம் உள்ள 50 கி.மீ. பணிகளும் முடிக்கப்பட்டது...

38. சென்னை மும்பை இடையேயான 1000 கி.மீ. ரயில் பாதை 1980 இல் இருந்து 0% (அடேங்கப்பா என்ன ஒரு முன்னேற்றம்) முன்னேற்றம் அடைந்த இப்பாதை மோதி ஜீ யின் அமைச்சர்களின் முயற்சியால் மிகுந்த முன்னேற்றம் அடைந்துள்ளது...

39. புற்று நோய் மருந்துகளின் விலை 87% வரை குறைக்கப்பட்டுள்ளது...

40. HMD எனப்படும் காணொளி திரையுடன் கூடிய தலை கவசம் இஸ்ரேல் அரசு உதவியுடன் BEL நிறுவனம் தயாரிப்பு...

41. டெல்லி மும்பை இடையே விரைவு பசுமை சாலை திட்டம்.. கார்களின் பயண நேரம் வெறும் 12 மணி நேரமாக இருக்கும், 36 மாதத்தில் பணி முடிக்க திட்டம். தூரம் 1450 இல் இருந்து 1250 கி.மீட்டராக குறையும்...

42. 43 ஆண்டாக கிடப்பில் கிடந்த கொல்லம் புறவழிச்சாலை நிறைவு...
அதை போல் 40 வருடமாக செயல்படுத்தாமல் இருந்த பன்சாகர் கால்வாய்த் திட்டம் நிறைவு...

43. நாட்டுகாக உயிர் நீத்த 34,844 காவலர்களுக்கான நினைவிடம் 35 ஆண்டுகளுக்கு பின்னர் 2018 இல் கட்டி திறக்கப்பட்டது...

44. பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத வைஷ்ணவி தேவியின் கோவிலுக்கு செல்வோருக்கான KATRA ரயில் பணிகள் நிறைவு...

45. சிக்கிமின் தலைநகர் காங்டாக் அருகே pakyong(பாக்யராங்) என்னும் இடத்தில் புதிய விமான நிலையம்...

46. கச்சா எண்ணெயில் சரிவில் இருந்த நம் நாடு தற்போது நம் நாட்டில் கச்சா எண்ணெய் கையிருப்பு அதிகரித்துள்ளது...

47. 100% கிராம மின்சாரம் திட்டம் வெற்றி பெற்று, தற்போது 100% வீடுகளுக்கு மின்சாரம் என்ற இலக்கை நோக்கி பயணம்...

48. 57 முஸ்லீம் நாடுகளின் மாநாட்டில் பாகிஸ்தான் எதிர்ப்பையும் மீறி, பாகிஸ்தானை ஒதுக்கிவிட்டு இந்தியா சிறப்பு அழைப்பாளராக சுஷ்மா சுவராஜ் பங்கு பெற அழைப்பு விடுத்தது துபாய் அரசு (புல்வாமா தாக்குதலுக்கு பிறகு நடந்தவை)...

49. தமிழ்நாட்டிற்கு புதிதாத 5 கேந்திரிய வித்யாலயங்கள்...

50.  மாவட்டத்துக்கு ஒன்றாக மத்திய அரசு கொடுக்க தயாராக இருந்த நவோதய பள்ளிகள் தரம் தாழ்ந்த அரசியலால் தமிழகத்தில் மட்டும் தடுக்கப்பட்டது... தங்களுடைய வியாபாரம் கெட்டு விடும் என்பதால்...

51. 22,000 கோடி மதிப்பில் ரஸ்யாவுடன் நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம்...

52. 4500 கோடி மதிப்பில் 3500 ஏக்கரில் மாமண்டூரில் விமான நிலையம் அமைக்க அனுமதி... 2022-23 இல் செயல்பாட்டிற்கு கொண்டு வர ஏற்பாடு... (அய்யோ த‌மிழக‌ விவசாய நிலங்கள் அழிக்கப்படுது ஏய் பாசிச பா.ஜ.க ஒழிக, தலீவரேஅது நம்ம ஏரியா இல்ல வாய மூடுங்க)...

53. குழந்தைகளை கற்பழிப்பு வழக்கில் அதிக பட்ச தண்டனை தூக்காக சட்டத் திருத்தம்...
கொலை மற்றும் கற்பழிப்பு குற்றங்களுக்கான சிறார் சட்டம் மாற்றி அமைப்பு, வயது வரம்பு 18 இல் இருந்து 16 ஆக குறைப்பு... 

54. அரசு கையகப்படுத்தும் தனியார் இடங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை அதிகரிப்பு...

55. USTTAD(Upgrading the Skills & Training in Traditional Arts /crafts for Development) கலை மற்றும் கைவினை பொருள் தொடர்புடைய பயிற்சி மேம்பாட்டு திட்டம் அறிமுகம்...

56. பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த எதிரிகளின் சொத்து சம்பந்தமான முழு விவரம் சட்டம் அமலுக்கு வந்தது... (ENEMY PROPERTY BILL)

57. சுற்றுலா துறையில் வருமானம் USD கணக்கில் 50% வளர்ச்சி கண்டுள்ளது அதாவது 70 வருடங்களாக 100 USD என்றால் இந்த ஆட்சியில் 150 USD...

58. மின்சார வாகனங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பல சலுகைகள் திட்டம்...
மின்சார வாகனங்கள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பாக இருக்கும்...

59. திருச்சி BHEL ஆலையில் மின்சார பேருந்துகள் தயாரிப்பு...

60. முன்னாள் காங்கிரஸ் அமைச்சரும்,ஜனாதிபதியின் ஆன உயர்திரு பிரணாப் முகர்ஜி பலமுறை இந்த ஆட்சியை பாராட்டி இருக்கிறார்... அவ்வளவு ஏன் இன்று ஜாமினில் மிதக்கும் ( எனக்கு தெரிந்த வரை 18 முறை ஜாமின்) சரித்திரம் படைத்த நமது சிதம்பரம் கூட பாராட்டி இருக்கின்றார்... கேடுகெட்ட பிரகாஷ் ராஜ் கூட ஒரு நேரத்தில் பாராட்டி உள்ளார்...

61. அனைத்து மத பண்டிகைகளும் பாரபட்சம் இல்லாமல் தவறாமல் வாழ்த்துகள் சொன்ன ஒரே தலைவர் மோதி ஜீ மட்டும்தான்...

62. ஒரு அரசியல் சாராத உயர்திரு அப்துல் கலாம் அவர்களை ஜனாதிபதி நாற்காலியில் அமர வைத்து அழகு பார்த்ததும் பிஜேபி தான்.., தலித் ஒருவரை இன்று ஜனாதிபதி ஆக்கி அழகு பார்ப்பதும் பிஜேபி யும் மோதி ஜீ யும் தான்....

63. மில்லியன் ரூபாய் செலவு செய்த மோதி ஜீ யின் வெளிநாட்டு பயணங்கள் மூலம் (1,36,077.75 மில்லியன் USD) சுமார் 95,25,390 மில்லியன் ரூபாய்கள் அன்னிய முதலீடு வந்துள்ளது... இதற்கு மேல் நமது நாட்டில் அனைத்து நாடுகளும் கொண்டிருக்கும் நட்புறவு போனஸ்...

64. சுதந்திர இந்தியாவில் இஸ்ரேல் நாட்டுக்கு சென்ற முதல் பிரதமர் மோதி ஜீ ம‌ட்டுமே. இதன் மூலம் இஸ்ரேல் முன்னணி வகிக்கும் விவசாயம், தண்ணீர் சுத்திகரிப்பு மற்றும் ராணுவ தொழில் நுட்பங்கள் உட்பட பல துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின... இஸ்ரேல் பிரதமருடன் கொண்ட நட்புறவு மூலம் பல நன்மைகள்....

65. ஆமை வேகத்தில் இருந்த பல மெட்ரோ ரயில் திட்டங்களை ஜெட் வேகத்தில் நிறைவேற்றப்பட்டது...

66. கோடிக்கணக்கான பேர் கலந்து கொண்ட கும்பமேளா ஒரு சிறு அசம்பாவிதம் ஏதும் இல்லாமல் நடந்தேறியுள்ளது...

67. வித்யா லட்சுமி திட்டத்தின் மூலம் கல்விக்கடன் வாங்குவது எளிதாகப்பட்டது...

68. பிரதம மந்திரியின் ஏழைகளுக்கான dialysis(டயாலிசிஸ்) திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கானோர் பயன்...

69. PMKVY திட்டத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்பட்டு வேலைவாய்ப்பு...

70. குறைந்த விலையில் ஃபேன், டியூப் லைட் மற்றும் LED விளக்குகள் அரசாங்கம் மூலமாக சந்தை விலையை விட குறைந்த விலையில் நல்ல கம்பெனிகளில் இருந்து தரமான தயாரிப்பு (நம்மூரில் கொடுத்த டி.வி, ஃபேன், கிரைண்டர் போல இல்லை) கொடுத்ததில் நடுத்தர மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த முடிந்தது....
இதனால் கார்பன் வெளியீடு குறைக்கப்பட்டு, மின் செலவு குறைக்கப்பட்டு, மின் தேவையும் குறைக்கப்பட்டுள்ளது...

71. வாகனங்கள் பதிவுக்கு RTO செல்லாமல் விற்பனை செய்பவரே பதிவு செய்ய சட்டம். இதனால் இடைத்தரகர் மற்றும் லஞ்சம் தவிர்ப்பு. படிப்படியாக அனைத்து RTO வேலைகளும் நேரில் செல்லாமலேயே செய்யத் தீவிரம்...

72. உயிர் இழக்கும் ராணுவ வீரர்களின் குழந்தைகளின் அனைத்து படிப்பு செலவும் அரசாங்கம் ஏற்பு... இதை கூட முன்பு இருந்த அரசுகள் செய்ய முன் வரவில்லை...

73. மேலும் ஒரு பொய் குற்றசாட்டு, முதியோர் உதவித் தொகை பெரும் வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச தொகை 1000 இல்லாததால் 1000 ரூபாய் உதவித் தொகை வாங்கும் கணக்கில் 600 பிடித்தம் செய்யப்படுகிறது என்பது வடிகட்டிய பொய்...
நானும் இதை முன்பு உண்மைன்னு இருந்தேன் தற்போது தெளிந்தேன்.
பொய் பரப்புவதை சற்று குறையுங்கள் ...

74. விண்வெளித் துறையில் பல்வேறு சாதனைகள்... ஒரே ராக்கெட்டில் 100 க்கும் மேற்பட்ட செயற்கை கோள்கள்.

75. சென்னை துறைமுகத்திற்கு வந்து போகும் வியாபாரிகள், மாலுமிகள் மற்றும் பயணிகள் தங்கும் வசதிக்காக 18 கோடி அளவிற்கு செலவு செய்தது...
கப்பலில் சரக்கை கையாளுதலுக்கான திறன் மேம்பாட்டை அதிகரிக்க 80 கோடி ஒதுக்கீடு...
சரக்கு கிடங்கு (storage) மேம்பாட்டிற்கு 54 கோடி ஒதுக்கீடு...
கப்பலில் இருந்து சரக்கை ஏற்றி இறக்கும் பகுதியை மேம்படுத்த 45 கோடி...
துறைமுகத்தின் கட்டமைப்புகளை மேம்படுத்த 63 கோடி...
குளிர்சாதன கிடங்குகளுக்கு 100 கோடி...

76. இதை போல் தமிழ்நாட்டில் மட்டும் இருக்கும் எண்ணூர் துறைமுகம்,தூத்துக்குடி துறைமுகம் ஆகிய மேம்பாட்டிற்கு மட்டும் சராசரியாக 80,000(நான் ஆய்வு செய்த வரைக்கும்) கோடி அளவிற்கு செலவு செய்தது மத்திய அரசு...
அப்படியென்றால் மற்ற துறைமுகங்களை சேர்த்தால் அடேங்கப்பா தமிழ்நாட்டிற்கு ஒன்றுமே செய்ய வில்லை என்பவன் கூட சற்று நேரம் வாய பிளந்து விடுவான்...

77. முத்ரா வங்கி கடன் திட்டம் மூலம் இந்தியா முழுவதும் பார்த்தால் தமிழகம் தான் அதிக அளவில் பயன்பெற்றுள்ளனர்...
இத்திட்டத்தின் மூலம் தொழில் துவங்க மற்றும் அதனை விரிவுப்படுத்த 52,000 கோடி ஒதுக்கியுள்ளது... இதையும் நான் சொல்லிட்ரேன்பா இந்த 52,000 கோடி ஒரு நபருக்கு இல்ல அது நம்ம மாநிலத்துக்கு ஒதுக்கிய பணம்... அப்பறம் 15 லட்சம் வங்கி பணம் மாதிரி கிளம்பிர கூடாது...
சராசரியாக வருடத்திற்கு தமிழ்நாட்டில் மட்டும் 54 லட்சம் பேர் கடன் வாங்கியுள்ளனர்...
இதெல்லாம் போதாதுனு கடனை உடனே திருப்பி செலுத்துபவருக்கு முன்னுரிமையில் மீண்டும் கடன் தரப்படும்...
அவ்ளோ நம்பிக்க தமிழ்நாட்டு மக்கள் மேல... 🤦‍♂

78. தமிழக மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்வதற்கு மீனவர்கள் வைத்திருக்கும் பழைய கருவியை மாற்றி புதிய கருவிகளை அரசு தந்தது...
நானும் தேடு தேடுனு தேடி பாத்துட்டேன் இதுக்கு எவ்வளவு பணம் கொடுத்துச்சுனே தெரியல... தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்க...

79. 👆தேடி பார்த்துட்டேன் மக்களே புதிய கருவிகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்காக பயிற்சியும், கருவிகளுக்கும் சேர்த்து 200 கோடி ஒதுக்கியுள்ளது...

80. ஆதாரை ரேசன் கார்டுடன் இணைத்ததன் மூலம் தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 10 லட்சம் போலி ரேஷன் அட்டை கண்டுபிடித்து பல்லாயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தை ஊழல்வாதிகளின் கைகளுக்கு போகாமல் தடுக்கப்பட்டது...
ஒரு ரேசனுக்கு 20 கிலோ அரிசி என்றால், 10 லட்சம் ரேசனுக்கு 2,00,00,000 கிலோ அரிசி மிச்சம்...

81. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சில நகரங்களை தேர்ந்தெடுத்து முதற்கட்டமாக சுமா‌ர் 2400 கோடி ஒதுக்கியுள்ளது...
இதில் மாநில அரசு 1% மட்டுமே செலவு செய்துள்ளது...

82. சென்னையில் மிகப்பெரிய கடல்நீர் சுத்திகரிப்பு ஆலைக்கு ஒப்புதல் அளித்து 4000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது...
இதில் நாள் ஒன்றுக்கு 40 கோடி லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்படும்...
(அய்யோ கடல் நீரை களவாண்டு மீன் வளத்தை அளிக்க போகுதே பாசிச பாஜக)

83. சொட்டு நீர் விவசாயத்திற்கு 40% மானியம் அளித்தது... 75,000 ஹெக்டேர் நிலத்தை பாசனத்திற்காக கொண்டு வந்தது... இதற்கு நம் மாநில அரசும் ஊக்கம் அளித்தது...

84. விவசாயிகளின் பிரச்சனைக்காக விவசாயிகளை டெல்லிக்கு அழைத்துச் சென்று மத்திய அமைச்சரிடம் அவர்களின் பிரச்சனைகளை எடுத்துரைத்தார் திரு பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள்... தற்போது அவரைத்தான் மத வெறி பிடித்தவர்கள் ஒன்று கூடி தோல்வி அடைய செய்தீர்கள் கன்னியாக்குமரி மக்களே... அவரு‌க்கு ஒன்றும் தோல்வியை கண்டு பயம் இல்லை...
இப்போ நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள வசந்தகுமார் பதவிக்காக வந்தவர்.... ஆனால் பொன். ராதாகிருஷ்ணன் அவர்கள் சேவைக்காக பதவிக்கு வந்த உத்தமன்...

85. பயிர் காப்பீட்டுத் திட்டம் மூலம் தமிழக விவசாயிகளுக்கு 2000 கோடி நஷ்ட ஈடு வழங்கியது...

86. மதுரை ➡ வஞ்சி மணியாச்சி ➡ தூத்துக்குடி, வஞ்சி மணியாச்சி ➡ திருநெல்வேலி ➡ நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி ➡ நாகர்கோவில் ➡ திருவனந்தபுரம் 3600 கோடி செலவில் மூன்று பாதைகளை இரட்டை வழி பாதையாக மாற்றியது... இவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை...

87. மதுரையில் 2000 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை... இரு மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோதி ஜீ அடிக்கல் நாட்டினார்...
முக்கிய குறிப்பு தனியார் மருத்துவமனை முதலாளிகளின் எதிர்ப்பை மீறி இவை நடந்தது எடுத்துக்காட்டாக சைமன் அவர்கள் கூறினார்கள் எய்ம்ஸ் மருத்துவமனை வந்தால் பாட்டி வைத்தியம் அழிந்து விடும் என்று...

88. இம்மருத்துவமனையில் கட்டணம் அனைத்தும் மிக குறைவு...
எய்ம்ஸ் மருத்துவமனையில் பித்தக் கற்கள் ஆப்பரேஷன் செலவு வெறும் 2000 ரூபாய், தனியார் மருத்துவமனையில் குறைந்தது 20,000 ரூபாய் செலவாகும்...
எய்ம்ஸ் மருத்துவமனையில் மொத்த முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைக்கு 8,000 ரூபாய், தனியார் மருத்துவமனையில் கிட்டத்தட்ட 3,00,000(3 லட்சம்) வரை செலவாகும்...

89. பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா(pradhan manthri awas yojana) திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுத்தல்...
தமிழ்நாட்டிற்கு தான் முதல் முதலாக ரூ.8660 கோடி குடிசை மற்றும் வாரியம் வாயிலாக 3 லட்சம் வீடுகள் கட்டித் தர மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த நிதியாண்டுக்கு மட்டும் 25000 க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன...

90. குறைந்த வட்டியில் வீட்டுக் கடன்...
அன்று 12%
இன்று 8%

91. காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் மேலாண்மை ஆணையம் அமைத்தது... தற்போது கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று...

92. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி வழங்கியது... நம் முதல்வர் பிரதமரிடம் ஜல்லிக்கட்டு விளையாட்டை பற்றி எடுத்துரைக்கவும் செய்தார்...

93. இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொள்ளப்பட்ட வந்த தமிழக மீனவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன... 
மோதி ஜீ ஆட்சியில் இதுவரை ஒரு மீனவர் கூட சுட்டுக் கொள்ளப் படவில்லை...

94. Make in india(மேக் இன் இந்தியா) திட்டத்தின் கீழ் ராணுவ தளவாட உற்பத்தி கூடங்கள் சேலம் - ஓசூர் - திருச்சி - கோவை க்கு ரூ. 1,00,000 கோடி ஒதுக்கீடு...

95. 3000 கோடி செலவில் பட்டேல் சிலையை திறந்து வைத்தார்... மக்கள் பணத்தை சிலை வைத்து வீணடிக்கிறார்கள் என்று நம்மூர் கேடுகெட்ட அரசியல்வாதிகள் புரளியைக் கிளப்பினார்கள். அதையும் நம்மூர் படித்த அறிவாளிகள் நம்பி ஆளுக்கொறு மீம்ஸ் போட ஆரம்பித்து விட்டார்கள்... உண்மையில் அந்த சிலை மக்களின் வரி பணத்தில் கட்டியது கிடையாது... அதற்காக  நிதி ஒன்று தொடங்கி அதில் மட்டும் கிட்டத்தட்ட 2000 கோடிக்கு மேல் பெறப்பட்டது... மீதி 1000(அதற்கும் மேல்) கோடி ஒரு பெரிய நிறுவனம் முதலீடு செய்தது...(எழுத்தாளர் மாரிதாஸ் அண்ணன் அவர்களுடைய காணொளி மூலம் தெளிவு பெற்றேன். நன்றி மாரிதாஸ் ஜீ)... 

96.பெரிதாக ஊழல் இல்லை, ரபேல் விமானம் என கத்தினாலும் ஆதாயம் பெற்றவர்களையோ இல்லை ஆதாரங்களையோ காட்டமுடியவில்லை... 
அதை தவிர வேறு ஊழல் இல்லை, கருப்பு பணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்து பெரும் சர்ச்சை ஏற்பட்டிருக்கலாம், ஆனால் அது நல்ல நோக்கம் என்பதை மறுப்பதற்கில்லை...

97. இந்தியாவை டிஜிட்டல் மையமாக்கும் விதமாக  ஏற்றவாரு மாற்றவும், இந்தியாவை டிஜிட்டல் சமுகமாகவும், அறிவுப்பூர்வமான பொருளாதார நாடக மாற்றவும் டிஜிட்டல் இந்தியா திட்டம் 2015 ஜூலை 1-ம் தேதி பிரதமர் மோடி அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டது.

98. ரூ.500, ரூ.1,000 ஆகிய ரூபாய் நோட்டுக்களை மதிப்பு நீக்கம் செய்யும் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி அறிவித்தார்.இதை தமிழ்நாட்டில் மட்டும் பணமதிப்பிழப்பு என்று சொல்லி மக்களை குழப்பி விட்டனர்... அவற்றை பணமாற்று முறை என்று கூறுவது சிறந்தது... எடுத்துக்காட்டாக வங்கியில் பழைய 500 ரூபாய் கொடுத்து பதிலுக்கு ஐந்து 100 ரூபாயை பெற்றோமே தவிர 500 க்கு 100 ரூபாய் வாங்கவில்லை...

99. பெண்கள் உதவி தேவை என்றால் தொடர்புகொள்ள அவசர கால தொடர்பு எண் 181 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 29 மாநிலங்கள் இந்த வசதியை செயல்படுத்தி வருகின்றன.
குடும்ப ஆதரவு இல்லாத, கணவனை இழந்த பெண்களுக்காக விடுதிகள் அமைக்கப்பட உள்ளது...

100. இஸ்லாமிய பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டது..

பிரதமரின் முதியோர் பாதுகாப்பு திட்டத்துக்கான ஓய்வூதிய முதலீடு வரம்பு ரூ. 7.5 லட்சத்தில் இருந்து ரூ. 15 லட்சமாக இரட்டிப்பு ஆக்கப்பட்டுள்ளது...

2018-19 பட்ஜெட்டில் சிறுபான்மையினர் நலனுக்காக ஒதுக்கீடு 62 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 4700 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது...

இன்னும் எழுத ஆசைதான் இருந்தாலும் இந்த சதத்துடன் முடித்துக் கொள்கிறேன்...

அப்பப்பா இதை தேடி ஆராய்ந்து உறுதி செய்த பின்னரே எழுதிய எனக்கே கொஞ்சம் தலை சுத்துது...

நடுநிலையாளர்கள் படித்த பிறகு என்ன நடக்கப் போகுதோ...

மக்களே நான் சொன்னது, தெரிந்தது கை அளவு தெரியாதது கடல் அளவு அது போல தான் நான் மேலே சொன்னதும்... அதனால் தயவு செய்து நீங்களும் சமூக வலைத்தளங்களில் தேடி பாருங்கள் என்னையும் நம்ப வேண்டாம்...

ஆனால் உன் மீது நம்பிக்கை வை...

நீ நடுநிலையாக இருப்பதில் தவறில்லை, ஆனால் அதிலிருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்புகளை நழுவ விடுவது தான் தவறு, இந்த தவறு திமுக போன்ற பிரிவினைவாத சக்திகளுக்கு சாதகமாக அமைவது தான் ஆரம்பமே...

நான் எழுதியதை முழுவதுமாக படித்து உண்மையை தெரிந்து கொண்ட அத்தனை சகோதர சகோதரிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom