ஆந்திராவில் தெலுங்கு தேசம், பாஜக, ஜனசேனா ஆகிய தேசிய ஜனநாயகக் கூட்டணி 20க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்த கூட்டணியில் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு முக்கிய தலைவராக வலம் வருகிறார்.
ஆந்திராவில் தெலுங்கு தேசம், பாஜக, ஜனசேனா ஆகிய தேசிய ஜனநாயகக் கூட்டணி 20க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இதையடுத்து இந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை சந்திரபாபு நாயுடுவுக்கு வழங்க பாஜக விருப்பம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆந்திர மாநில பாஜக தேர்தல் அதிகாரி சித்தார்த் நாத் நேற்று சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார்.
இதை கேட்ட சந்திரபாபு நாயுடு, கட்சியினரிடம் பேசி 48 மணி நேரத்தில் பதில் அளிப்பதாக கூறியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.