Type Here to Get Search Results !

திருப்பதி விமான நிலையத்திற்கு ஏழுமலையானின் பெயரை சூட்ட மத்திய அரசுக்கு பரிந்துரை

 


திருப்பதி விமான நிலையத்திற்கு ஏழுமலையானின் பெயரை சூட்ட மத்திய அரசுக்கு பரிந்துரை

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில், திருப்பதி விமான நிலையத்திற்கு “ஸ்ரீ வெங்கடேஸ்வரா சர்வதேச விமான நிலையம்” எனப் பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசிடம் பரிந்துரை செய்ய ஒருமனதாக முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில், அறங்காவலர் குழுத் தலைவர் பிஆர் நாயுடு தலைமையில் நேற்று அவசர கூட்டம் நடைபெற்றது. இதில் பல முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. பின்னர் பிஆர் நாயுடு மற்றும் தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் முன்வைத்த வேண்டுகோளின் அடிப்படையில், பெங்களூருவில் அமைந்துள்ள தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில் விரிவுபடுத்தப்பட்டு மிகப்பெரிய ஆலயமாக கட்டப்படும்.

மத்திய அமைச்சர் குமாரசாமி, தேவஸ்தானத்துக்கு 100 மின்சார பேருந்துகளை வழங்குவதாக உறுதி அளித்துள்ளதாகவும், அவை விரைவில் சேவையில் இணைக்கப்படும் என்றும் கூறப்பட்டது. அதேபோல், திருப்பதியில் தண்ணீர், நெய் மற்றும் உணவுப் பொருட்கள் பரிசோதிக்க மத்திய அரசின் சிஎஸ்ஐஆர் ஆய்வகம் விரைவில் நிறுவப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.