2019ல் சந்திரபாபு நாயுடு அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் மோடிக்கு எதிராக திரட்டினார் என்று சவுரவ் பரத்வாஜ் கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் போன்ற கூட்டணியில் உள்ள பெரிய கட்சிகளை அரவணைத்து ஆட்சி அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதை சுட்டிக்காட்டி ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி சுகாதாரத்துறை அமைச்சருமான சவுரவ் பரத்வாஜ், பாஜகவை ஆட்சி அமைக்க விடாமல் தடுக்க இரு கட்சிகளுக்கும் மறைமுக அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் தனது 'எக்ஸ்' இணையதளத்தில் கூறியிருப்பதாவது:-
சுவையான உண்மைகள். கடந்த 2019-ம் ஆண்டு தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் மோடிக்கு எதிராக திரட்டினார். அதேபோல், 2024ல், மோடிக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் ஒன்று திரட்டினார் நிதிஷ்குமார். இப்போது எல்லாம் அவர்கள் கையில்.
அவர் கூறியது இதுதான்.