Type Here to Get Search Results !

கொரோனா பரவ காரணம் சீன அதிபர் மற்றும் உலகசுகாதார அமைப்பின் தலைவர் ஆகியோர் மீது பீஹார் வக்கீல் ஒருவர் வழக்கு

விசுவாசமாக இருக்க வேண்டும்.. சீன ...

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவ காரணமாக இருந்த சீன அதிபர் மற்றும் உலகசுகாதார அமைப்பின் தலைவர் ஆகியோர் மீது பீஹார் வக்கீல் ஒருவர் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இது குறித்து கூறப்படுவதாவது: சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து கொரோனா வரைஸ் பரவ துவங்கியது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஏராளமானோர் பலியாகி உள்ளனர். அமெிக்க அதிபர் டிரம்ப் வைரஸ் தொற்றுக்கு சீனா தான் காரணம் என வலியுறுத்தி வருகிறார். பிரதமர் மோடியும் இதனை சுட்டிக்காட்டி உள்ளார்.

இந்நிலையில் பீஹார் மாநிலம் மேற்கு சம்ரான் மாவட்ட நீதிமன்றத்தில் வக்கீல் முராத் அலி என்பவர் கொரோனா வைரஸ் பரவலுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் தொற்று குறித்து உலகிற்கு தகவல் அளிக்காமல் மறைத்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.
இந்திய தண்டனை சட்டம் 269,270,271,302,307,500,504, மற்றும் 120 பி பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். மேலும் சாட்சிகளாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை சேர்த்துள்ளார். இந்த வழக்கு ரும் 16 ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom