Type Here to Get Search Results !

நமது நோக்கம் கோட்டையாக இருக்க வேண்டும்... பா.ஜ.க நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் குஷ்பு பேச்சு


பா.ஜ.க நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய பா.ஜ.கவை சேர்ந்த குஷ்பு, ‛நமது நோக்கம் கோட்டையாக இருக்க வேண்டும்,' என தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் உள்ள தனியார் அரங்கில், பா.ஜ.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் குஷ்பு பேசியதாவது: முதல் கூட்டமே மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நாம் என்ன செய்ய போகிறோம் அதுமட்டுமே தற்போது முக்கியமான நோக்கமாக இருக்க வேண்டும். சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி, பா.ஜ., வேட்பாளர் நிறுத்தப்பட்டால் அவர் நிச்சயமாக வெற்றி பெற வேண்டும். வேட்பாளர் யாராக இருந்தாலும் அவரை வெற்றி பெற செய்ய வேண்டும்.

காங்கிரஸ் கட்சியில் இருக்கும்போது, பா.ஜ., நல்ல திட்டங்களை கொண்டு வந்தாலுமே கூட, எதிர்க்கட்சி என்ற காரணத்தால் அதனை விமர்சித்தே ஆக வேண்டும்.

தற்போது மக்களை சந்தித்து பணியாற்றும் வாய்ப்பு கொடுத்த பா.ஜ.க மாநில தலைவருக்கு நன்றி. பா.ஜ.கவிற்கு மக்கள் வாக்களித்தால் என்ன பயன் இருக்கிறது என்பது குறித்து மக்களிடம் நாம் எடுத்து செல்ல வேண்டும். அதுமட்டுமின்றி சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி பகுதியில் இறங்கி வேலை செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 20 பூத்கள் இலக்கு வைத்து பணியாற்ற வேண்டும். நம் நோக்கம் கோட்டையாக இருக்க வேண்டும். எல்லோரும் ஒற்றுமையாக இருந்து, எந்த ஒரு வேட்பாளர் நிறுத்தப்பட்டாலும் அவரை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom