கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி விநியோகம் அடுத்த வாரம் முதல் தொடங்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க நிறுவனமான மாடர்னா, கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடித்த தடுப்பு மருந்து 95 சதவீத அளவுக்கு பலனளிப்பதாக கூறியிருந்தது.
இதேபோன்று ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-வி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு, இந்திய நிறுவனம் தயாரித்துள்ள கோவேக்சின் உள்ளிட்ட தடுப்பு மருந்துகள் தற்போது பரிசோதனை கட்டத்தில் உள்ளன.
இந்நிலையில், அமெரிக்காவில் நன்றி தெரிவிக்கும் நாளையொட்டி அதிபர் டிரம்ப் காணொலி வாயிலாக ராணுவ வீரர்களுடன் உரையாற்றினார்.
அப்போது, அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடங்க இருப்பதாகவும், முதல்கட்டமாக முன்கள பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் என்றும் கூறினார்.
AthibAn Tv