Type Here to Get Search Results !

புல்வாமாவில் 40 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைய காரணம் பாகிஸ்தான் : அமைச்சர் பாவத் சவுத்ரி ஒப்புதல்



காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் 40 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைய காரணமான பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் தங்களுக்கு நேரடி தொடர்பு உள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் பாவத் சவுத்ரி, பார்லிமென்டில் ஒப்பு கொண்டுள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம், ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எல்., வீரர்கள் சென்ற கான்வாய் மீது, சொகுசு காரில் வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி, தனது காரை மோடி வெடிகுண்டுகளை வெடிக்க செய்தான். இதில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இது இந்தியாவையும், பாதுகாப்பு படையினரையும் பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் பாலகோட்டில் விமானபடை தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் பயங்கரவாத முகாம்கள் சேதப்படுத்தப்பட்டதுடன், பலபயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் பார்லிமென்டில் அந்நாட்டு அமைச்சர் பாவத் சவுத்ரி பேசியதாவது: இம்ரான்கான் தலைமையில் புல்வாமாவில் மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. நாம் இந்தியாவை, அவர்கள் மண்ணில் தாக்கினோம். இம்ரான்கான் தலைமையில், புல்வாமாவில் நாம் பெற்ற வெற்றி, மக்களுக்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றியில், எங்களுக்கும், உங்களுக்கும் பங்கு உள்ளது எனக்கூறினார்.

இது எம்.பி.,க்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சலசலப்பையும் உண்டாக்கியது. இதனையடுத்து, பாவத் சவுத்ரி கூறும்போது, புல்வாமா நடந்த சம்பவத்திற்கு பிறகு, இந்தியாவை அவர்களின் மண்ணில் தாக்கினோம் என தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom