Type Here to Get Search Results !

கோவை அரசு மருத்துவமனைக்கு, முதலமைச்சர் பழனிச்சாமி பாராட்டு




கோவை அரசு மருத்துவமனை டாக்டர்களுக்கு, முதலமைச்சர் பழனிச்சாமி ட்விட்டர் மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம், கருப்பகவுண்டன் புதுாரில் வசிப்பவர் விக்ரம் குமார்,20. வடமாநிலத்தை சேர்ந்த இவர், சாலை விபத்து ஒன்றில் சிக்கி, மேல் சிகிச்சைக்காக உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து அவரை காப்பாற்றினர். முன்னதாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. எனினும், டாக்டர்கள் துரிதமாக செயல்பட்டு உயிரை காப்பாற்றியுள்ளனர்.

இந்நிலையில், புலம் பெயர் தொழிலாளியை, கோவை அரசு மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளது நெகிழ்ச்சி அளிக்கிறது. நெருக்கடியான சூழலிலும் உயிரை காப்பாற்றிய மருத்துவ குழுவினருக்கு எனது பாராட்டுக்கள் என, முதலமைச்சர் பழனிச்சாமி ட்விட்டர் மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom