சூர்யகுமார் யாதவ் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், டி20 தரவரிசையில் நம்பர் 1 பேட்ஸ்மேனுமான சூர்யகுமார் யாதவ் ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார்.
காயம் மற்றும் பயிற்சியில் இருந்து மீண்டு வந்த அவர் ஏற்கனவே 2 போட்டிகளில் விளையாடவில்லை. அந்த 2 போட்டிகளிலும் மும்பை அணி தோல்வியடைந்துள்ளது. அவர் எப்போது களம் இறங்குவார் என மும்பை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யகுமார் யாதவுக்கு சமீபத்தில் ஹெர்னியா ஆபரேஷன் செய்யப்பட்டது. தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார். போட்டிக்கு அவர் முழு உடல் தகுதி இல்லாததால் மேலும் சில ஐ.பி.எல். இதனால் அவர் ஆட்டங்களில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
AthibAn Tv