தேர்தல் பத்திரம் கணக்கில் இருப்பதால் அதை ஊழலாக கருத முடியாது என தென் சென்னை பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, தேர்தல் களம் பரபரப்பாக மாறியுள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் தென் சென்னை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக களம் இறங்கியுள்ள தமிழிசை சௌந்தரராஜன் தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். இதனிடையே கோடம்பாக்கத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது தேர்தல் பத்திரங்கள் குறித்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன், “அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகாரப்பூர்வமாக பணம் பெற்றதால் தான் இத்தனை வருடங்கள் கழித்தும் சரிபார்க்க முடிகிறது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பத்திரங்கள் மூலம் பணம் பெற்றுள்ளன. ஆனால் பா.ஜ.க. குற்றம் சாட்டப்படுகிறது. கணக்கில் ஏதாவது இருந்தால், அது ஊழல். "வர முடியாது. தேர்தல் பத்திரம் கணக்கில் உள்ளது. அதை ஊழலாக கருத முடியாது," என்றார்.
AthibAn Tv