Type Here to Get Search Results !

யாஸ் புயல் காரணமாக 4-க்கு மாநிலங்களுக்கு கடும் எச்சரிக்கை

 

யாஸ் புயல் காரணமாக ஆந்திரா, ஒடிசா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் உள்ள கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பன இடங்களில் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு அந்தமான் கடலில் நாளை ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இது 24ம் தேதி புயலாக வலுவடைந்து வடமேற்கு திசையில் நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த புயலுக்கு யாஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், 26ம் தேதி காலையில் ஒடிசா-மேற்கு வங்காளம் இடையே புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

மேலும், புயல் பாதிப்பு உள்ள இடங்களை கண்டறிந்து, அங்குள்ள கொரோனா சிறப்பு முகாம்களில் உள்ள நோயாளிகளை மீட்டு வேறு முகாமிற்கு மாற்ற வேண்டும், கடலோர மாவட்டங்களில் சுகாதார வசதிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும், மருத்துவமனைகளில் மின்சாரம், தண்ணீர், எரிபொருள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.