தேவர் விழாவில் திருநீற்றை அவமதித்து தேவர் சமுதாயத்தை இழந்தாய்!
வன்னியர் இட ஒதுக்கீடுக்கு எதிராக நீதிமன்றம் சென்று
வன்னியரை பகைத்தாய்!
தேவேந்திர குல வேளாளர் மசோதாவை பாராளுமன்றத்தில் எதிர்த்து வெளிநடப்பு செய்து அந்த சமுதாய மக்களின் இதயத்தில்
நீங்கா பழியானாய்!
நாங்கள் போட்ட பிச்சை என்று
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை
ஏளனம் செய்தாய்!
பல காலமாக பார்பணர்களுடன்
பகையை வளர்த்தாய்!
மக்கள் தொகை கணக்கெடுப்பை இஸ்லாமிய மக்களிடம் பொய் சொல்லி அவர்களை தேச விரோதிகளாக
மாற்ற நினைத்தாய்!
கச்சத்தீவை விற்றாய், காவிரியை புதுப்பிக்காமல் விட்டாய், ஹைட்ரோகார்பன்
மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்தாய், ஸ்டெர்லைட் ஆலைக்கு இடத்தை கொடுத்தாய், நீட்டிற்கு ஆதரவு
கொடுத்து நீங்கா பழிக்கு மூலமானாய், இத்தனை செய்துவிட்டு இப்போது வந்து
"விடியல் தருவேன்" என்று நீ
வெட்கமில்லாமல் சொல்லலாம்!
இத்தனையும் நீ மக்களை திராவிடனாக நினைத்து செய்தாய். இன்று இந்தியர்களாய் ஒன்றுபட்ட மக்கள், உங்களுக்கு எப்போதும்
விடியலை தரமாட்டார்கள்.
AthibAn Tv