ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும் நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும். என்னை மன்னியுங்கள்’ என்று அறிவித்து கட்சி தொடங்குவதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்.
ரஜினியின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துவருகிறார்கள். இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார். போடியில் செய்தியாளர்களிடம் ஓ. பன்னீர் செல்வம், “ரஜினி கட்சி தொடங்க இருப்பதாக தெரிந்தவுடன் வாழ்த்து தெரிவித்தேன். ஜனநாயகத்தில் கட்சி தொடங்க அனைவருக்கும் உரிமை உண்டு. தற்போது உடல்நிலையைக் கருத்தில்கொண்டு அவர் எடுத்த முடிவுக்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். உடல்நிலை நன்றாக இருந்தால்தான் சிறப்பாக பணியாற்றமுடியும்” என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
AthibAn Tv