தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு, குஜராத்தில் உள்ள ஒற்றுமை சிலை பகுதியில் நடந்த விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ‛‛மன்னும் இமயமலை எங்கள் மலையே : மாநிலமீததுபோல் பிறிதில்லையே!'' என்ற மகாகவி பாரதியார் கவிதையை மேற்கோள் காட்டி பேசினார்.
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக குஜராத்திற்கு வந்துள்ளார். இன்று, தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு, சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு, குஜராத் மாநிலம் கெவாடியாயில் அமைந்துள்ள ஒற்றுமை சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் விழாவில் பேசும் போது, இந்தியா, ஒரே இந்தியாவாக இருக்க வேண்டும் என்பதையும், ஒற்றுமையை பறைசாற்ற வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் விதமாக மகாகவி பாரதியார் எழுதிய ‛‛மன்னும் இமயமலை எங்கள் மலையே; மாநிலமீததுபோல் பிறிதில்லையே! என்ற கவிதையை மேற்கோள் காட்டி பேசினார்.
AthibAn Tv