திருமணத்திற்காக மட்டும் மதம் மாறுவதை ஏற்க முடியாது என அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் காதல் திருமணம் செய்த தம்பதி பாதுகாப்புக் கோரி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது, அந்தப் பெண் திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு மதத்தில் இருந்து வேறு மதத்திற்கு மாறினார் என்று குறிப்பிட்ட நீதிபதி, திருமண நோக்கத்திற்காக மதம் மாற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று குறிப்பிட்டு அந்தத் தம்பதி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
ஒருவர் மதம் மாற வேண்டும் என்றால் அந்த மதம் குறித்து தெளிவு பெற வேண்டும் 2014- ம் ஆண்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சுட்டிக்காட்டிய நீதிமன்றம் இஸ்லாம் குறித்து எந்த ஒரு நம்பிக்கை குறித்து அறியாத ஒரு பெண் திருமணத்தை காரணம் காட்டி மதம் மாறுவது தவறு, இது திட்டமிட்டு மதம் மாற்றம் செய்யும் நிலைக்கு உள்ளாகும் செயல் எனவே திருமணத்தை காரணம் காட்டி மதம் மாற்ற படுவதை ஏற்க முடியாது என தீர்ப்பு வழங்கினார்.
இதையடுத்து அந்த பெண் வேறு மதத்திற்கு மாறியது செல்லாது என உறுதியாகியுள்ளது, தொடர்ந்து இந்தியாவில் காதல் பெயரில் இந்து பெண்கள் வீழ்த்தப்பட்டு மதம் மாற்ற படுவது தொடர்கதையாக மாறிவரும் சூழலில் அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரவேற்பை பெற்றுள்ளது, சமீபத்தில் இஸ்லாம் மதத்திற்கு மாற மறுத்த இளம்பெண்ணை கல்லூரி வளாகத்திலேயே தவுபிக் என்ற இளைஞன் சுட்டு கொன்றது இந்திய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து அதிகரித்துவரும் லவ்ஜிஹாத் வழக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியாவில் மதமாற்ற தடை சட்டத்தை கொண்டுவருவது என்பது மட்டுமே ஒரு தீர்வு என இந்து அமைப்புகளும் லவ் ஜிஹாத்தில் சிக்கி வாழ்க்கையை இழந்து தற்போது பெற்றோருடனும், காப்பகத்திலும் வாழ்ந்து வரும் பெண்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
தற்போது அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முன்வைத்து இதே போன்று பல வழக்குகளில் தீர்ப்புகள் மாறலாம் என்பதால் இந்த தீர்ப்பை நாடுமுழுவதும் உள்ள இந்து அமைப்புகள் வரவேற்றுள்ளன.
தேச துரோகிகள் கண்டிப்பாக தண்டிக்க படவேண்டும்.
பதிலளிநீக்குAthibAn Tv