உ.பி.,யில் சமாஜ்வாதி கட்சியை தோற்கடிக்க பா.ஜ.கவுக்கு ஓட்டுப்போடுவோம் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
உ.பி.,யில் கடந்த சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியை தொடர்ந்து, அங்கு எதிரெதிர் பக்கத்தில் இருந்த சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து 2019 லோக்சபா தேர்தலில் போட்டியிட்டன. ஆனால், இந்த கூட்டணி வெற்றி பெறவில்லை. இதனால், கூட்டணி முறிந்துவிட்டதாக மாயாவதி அறிவித்தார்.
இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் 6 எம்.எல்.ஏ.,க்கள், சமாஜ்வாதி தலைவர் அகிலேசை சந்தித்து பேசினர். அவர்கள் விரைவில், சமாஜ்வாதியில் சேரப்போவதாக தெரிவித்ததுடன், பகுஜன் சமாஜ் கட்சியின் ராஜ்யசபா வேட்பாளர் கவுதமை தாங்கள் ஆதரித்ததாக அளித்த கடிதம் போலியானது எனவும் கூறியுள்ளனர். இது அந்த மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது.
இது தொடர்பாக மாயாவதி கூறியதாவது: உ.பி., மேலவை தேர்தலில் அகிலேஷின் சமாஜ்வாதி கட்சியை தோற்கடிக்க நாங்கள் பா.ஜ.கவுக்கு கூட ஓட்டுப்போடுவோம் . ராஜ்யசபா தேர்தல், எதிர்காலத்தில் உ.பி.,யில் நடக்கும் மேலவை தேர்தலில் சமாஜ்வாதியை தோற்கடிக்க முடிவு செய்துள்ளோம். இதற்கு எங்கள் முழு சக்தியையும் பயன்படுத்துவோம். இதற்காக பா.ஜ.கவுக்கு கூட ஓட்டுப்போடுவோம். சமாஜ்வாதியின் வேட்பாளரை தோற்டிக்கும் வகையில், எந்த கட்சி வேட்பாளர் செயல்பட்டாலும், அவர்களை பகுஜன் சமாஜ் ஆதரிக்கும்.
கடந்த 1995ம் ஆண்டு சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற்றதுநான் செய்த மிகப்பெரிய தவறு. கடந்த லோக்சபா தேர்தலில் அகிலேசுடுன் நாங்கள் கூட்டணி வைத்து மிகப்பெரிய தவறு செய்துவிட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
AthibAn Tv