பீஹாரில், கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது தேர்தல் விதிமுறை மீறல் இல்லை என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
பீஹாரில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தால், அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என பா.ஜ., தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாகேத் கோகலே என்ற சமூக ஆர்வலர், இந்த வாக்குறுதி தவறானது. தேர்தல் நேரத்தில் மத்திய அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது எனக்கூறி தேர்தல் கமிஷனில் புகார் செய்தார்.
இதனை விசாரித்த தேர்தல் கமிஷன், பா.ஜ.க வாக்குறுதியில், தேர்தல் விதிமுறைகள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளது. மேலும், வாக்குறுதிகள் குறித்த விதிமுறைகளையும் மேற்கோள் காட்டியுள்ளது.
AthibAn Tv