Type Here to Get Search Results !

வேல்யாத்திரை எதிர்ப்பது ஏன்..? விடுதலை சிறுத்தை கட்சியினர் அதிர்ச்சி தகவல் : திருமாவளவன் கதறல்...!


தமிழகத்தில் பாஜக சார்பில் வருகின்ற நவம்பர் 6 ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை வேல் யாத்திரை நடத்த அக்கட்சி முடிவு செய்துள்ளது, இதற்காக மத்திய அமைச்சர்கள், தேசிய பாஜக தலைவர்கள் பங்கேற்கும் நாட்கள் இடங்கள், பேசவேண்டிய குறிப்புகள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் பணியில் மும்முரமாக பாஜக செயல்பட்டு கொண்டு இருக்கிறது.

இதற்கிடையில் திடீர் என திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் வேல் யாத்திரைக்கு மாநில அரசு அனுமதி கொடுக்க கூடாது என தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர், மேலும் திருமாவளவன் தனது கட்சி சார்பில் சென்னையில் தற்போது ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி வருகிறார்.

அதில் வேலயாத்திரையை மாநில அரசு அனுமதித்தால் பல்வேறு பின்விளைவுகள் ஏற்படும் எனவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார், இதற்கிடையில் ஏன் திருமாவளவன் வேல்யாத்திரையை தீவிரமாக எதிர்க்கிறார் என்ற பதில் கிடைத்துள்ளது, சமீபத்தில் திருமாவளவன் இந்து பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய சம்பவம் மிக பெரும் கொந்தளிப்பை பெண்கள் இடையே ஏற்படுத்தியது.

அதை தொடர்ந்து திருமாவளவனுக்கு சொந்த கட்சியை சேர்ந்தவர்கள் இடையே அதிக எதிர்ப்பை உண்டாக்கியது, இந்நிலையில்தான் திருமாவளவனை கண்டித்து கட்சி துண்டை தீவைத்து கொளுத்திவிட்டு பாஜகவில் இணைந்தார் பெரியவர் ஒருவர், இவர் திருமாவளவன் இந்து பெண்களை தவறாக பேசியதால் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்தார்.

இந்நிலையில் சொந்த சமூகத்தினர் இடையே திருமாவளவனுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது, முருகன் பாஜக தலைவராக நியமிக்கப்பட்டதில் இருந்து பட்டியல் சமூகத்தை சேர்ந்த மக்கள் பெரும்பாலும் பாஜக பக்கம் திரும்பி வருகின்றனர், குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து பல நிர்வாகிகள் பாஜகவில் இணைந்தனர்,

பாஜகவில் இணைந்த பலரும் கூறியது தேனி மாவட்டம் பொம்மிநாயகன் பட்டியில் எங்கள் பட்டியல் சமூகத்தை சேர்ந்த இறந்த பெண்ணின் உடலை தங்கள் பகுதியில் கொண்டு செல்லக்கூடாது என இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர், பின்னர் கலவரம் வெடித்தது, எங்கள் வீடுகள் சூறையாடப்பட்டன ஆனால் எங்கள் பக்கம் நிற்கவேண்டிய திருமாவளவன் சம்பவம் நடந்து பல நாட்களுக்கு பிறகு இரண்டு தரப்பையும் சமாதான படுத்தும் முயற்சியில் சந்தித்தார் அன்றே எங்கள் சமூகத்தை விட திருமாவளவனுக்கு இஸ்லாமியர்கள்தான் முக்கியம் என்பதை உணர்ந்தோம் எனவே அவரை விடுத்து இப்போது பாஜகவில் இணைவதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது வேல் யாத்திரை நடைபெறும் பெரும்பாலான இடங்கள் பட்டியல் சமூக மக்கள் இருக்கும் இடங்களில் நடைபெறவுள்ளன என்பதும் அதில் பல பட்டியல் சமூகத்தை சேர்ந்த மக்கள் முன்னெடுக்க இருப்பதால், எங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கூடாரம் காலியாகிவிடும் என்பதால் திருமாவளவன் இப்போது வேல் யாத்திரையை தடை செய்ய சொல்லி கதறுவது தெளிவாகியுள்ளது.

ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பார்கள் அது போல் கிராமம் முழுவதும் குறிப்பாக பட்டியல் சமூகத்தினர் பாஜக நோக்கி திரும்புவது தற்போது கட்சி கொடியை கொளுத்தி பாஜகவில் இணையும் முதியவர் மூலம் தெளிவாக தெரியவந்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom