Type Here to Get Search Results !

'பாரத மாதாவின் தவப்புதல்வர் பகத் சிங்': பிரதமர் மோடி புகழாரம்


இந்திய விடுதலை போராட்ட மாவீரன் பகத் சிங்கின், 113வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தி உள்ளனர்.

பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ''பாரத மாதாவின் தவப்புதல்வரான அமரர் பகத் சிங்கின் பிறந்த நாளன்று, அவருக்கு கோடானு கோடி அஞ்சலிகள். வீரம் மற்றும் துணிச்சலின் எடுத்துக்காட்டான அவரது வரலாறு நாட்டு மக்களுக்கு என்றும் ஊக்கமளிக்கும்,'' எனப் பதிவிட்டுள்ளார்.

அமித் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில், ''ஷாஹீது பகத் சிங் எப்போதுமே இந்தியர்களுக்கு உத்வேகம் அளிப்பவராகவே இருப்பார். தனது புரட்சிகர சிந்தனைகள், தியாகத்தின் மூலம் சுதந்திரப் போராட்டத்திற்கு புதிய பாதையை உருவாக்கிய பகத் சிங்கிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் எப்போதும் நமக்கு உத்வேகம் அளிப்பவராகவே இருப்பார்,'' எனத் தெரிவித்துள்ளார்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom