பா.ஜ.க தேசிய செயலர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட எச்.ராஜாவுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பா.ஜ.க தேசிய நிர்வாகிகள் பட்டியல் நேற்று முன்தினம் வெளியானது. இதில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு இடம் அளிக்கப்படவில்லை. ஏற்கனவே தேசிய செயலராக இருந்த எச்.ராஜாவும் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். இது தமிழக பா.ஜ.கவினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எச்.ராஜாவுக்கு வேறு பொறுப்பு வழங்கப்படாதது எதிர்க்கட்சியினரிடம் மகிழ்ச்சியையும் பா.ஜ.வினரிடம் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ.கவில் ஒரே பதவியில் தொடர்ந்து இரு முறை இருந்ததால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில் அவரை ராஜ்யசபா எம்.பி.யாக்க கட்சி தலைமை ஆலோசித்து வருகிறது.
விரைவில் வேறு மாநிலத்தில் இருந்து அவர் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட வாய்ப்பள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
AthibAn Tv