Type Here to Get Search Results !

கிம் ஜோங் உன் சகோதரி திடீர் மாயம்: சுட்டுக்கொல்லப்பட்டாரா?




வட கொரிய அதிபர் கிம் ஜோங், குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்த நிலையில், அவரது சகோதரி கிம் யோங் உன் திடீரென மாயமானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கிழக்காசிய நாடான வட கொரியாவின் தலைவர், கிம் ஜாங்க் உன், 36, உடல் நிலை குறித்தும் அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாகவும், கடந்த மார்ச் மாதம் பல்வேறு யூகங்களுடன் செய்திகள் வெளியானது. கடந்த மே மாதம் தலைநகர் பியோங்யாங் நகரில் நடந்த பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கிம் ஜாங் உன், கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும், மரணமடைந்துவிட்டதாகவும் மீண்டும் செய்திகள் வெளியானநிலையில் அவற்றை பொய்யாக்கி பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

கடந்த ஆக.20-ம் தேதி கிம்ஜோங் உன் தனது சகோதரி கிம் யோ ஜாங்க், 31 க்கு அனைத்து அதிகாரத்தை பகிர முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் அடுத்து அதிபராக வருவார் என கூறப்படும் சகோதரி கிம் யோ ஜாங்க் திடீரென மாயமானதாக நேற்று செய்தி வெளியாகியுள்ளது.

இது குறித்த ஊடகங்களில் வெளியிடப்பட்டிருப்பதாவது,எப்போதும் கிம் ஜோங் உன்னுடனயே பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் கிம் யோ ஜாங், கடந்த ஜூலை 27 முதல் பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளவில்லை. ஆக.25-ம் தேதி நடந்த பொலிட்பீரோ கூட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை. அவர் என்ன ஆனார், எங்கே சென்றார் என்பது தெரியவில்லை.

நம்பிக்கை துரோகம் செய்ததாக 2013ல், தனது தாய்மாமனும், துணை அதிபருமான ஜங் சங் தக், சுட்டுக்கொல்லப்பட்டார். இதே போன்ற நிலை தமக்கும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக உடல்நிலை குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்த போதெல்லாம் அவருடைய சகோதரி, கிம் யோ ஜாங்க் ஆட்சியை நிர்வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom