Type Here to Get Search Results !

காஷ்மீரில் கடந்த 24 மணிநேரத்தில் 7 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்




ஜம்மு காஷ்மீரின், ஷோபியான் மாவட்டத்தில் கிலூரா பகுதியில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில், நேற்று (ஆக.,28) அடையாளம் தெரியாத 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அந்த பகுதியில் மோதல் நடந்து வந்தது. அதேபோல், ஜம்மு காஷ்மீரின் புல்வாமா ஜடூரா பகுதியில் நேற்று அதிகாலை முதல் பயங்கரவாதிகளைத் தேடும் பணிகள் தொடங்கின.

இந்நிலையில் இன்று அதிகாலையில், புல்வாமா மாவட்டத்தில் அடையாளம் காணப்படாத மூன்று பயங்கரவாதிகள் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்தன. அதிகாலை ஒரு மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், மேலும் தேடுதல் பணிகள் தொடர்வதாகவும் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom