சட்டசபை தேர்தலுக்கு பிறகு பா.ஜ., மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கும் என பா.ஜ.,வில் இணைந்த முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எஸ்., பணியில் இருந்து ராஜினாமா செய்து, சமீபத்தில் பா.ஜ.,வில் இணைந்த ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலை, கோவையில் நிருபர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: வரும் தேர்தலில் பா.ஜ.,விற்கு அதிகளவு இளைஞர்கள் ஓட்டுப்போடுவார்கள். புதிய கல்வி கொள்கையில் ஹிந்தி திணிப்பு இல்லை. ஹிந்தி படிக்க தேவையில்லை. தமிழர்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
பல்வேறு மாநிலங்களில் பா.ஜ., பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து வருகிறது. இது போல் தமிழக்த்திலும் பா.ஜ., ஆட்சியை பிடிக்கும். சட்டசபை தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் பா.ஜ., மிகப்பெரிய கட்சியாக இருக்கும். சட்டசபை தேர்தலில் வாய்ப்பளித்தால் போட்டியிடுவேன். என்றுமே தமிழன் என்பதில் பெருமைப்படுகிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
AthibAn Tv