தென்னாப்பிரிக்காவில் ரேஞ்சர் ஒருவர் தான் வளர்த்த சிங்கத்தாலேயே கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
அந்நாட்டின் லிம்போபோ மாகாணத்தில் வெஸ்ட் மேத்யூசன் (69) என்பவர் மற்றும் அவரது குடும்பத்தினர் லயன் ட்ரீ டாப் லாட்ஜ் என்ற பெயரில் விடுதி ஒன்றை நடத்தி வந்தனர்.
சம்பவதன்று ஒரு சிங்கம் எதிர்பாராத வகையில் அவரை தாக்கியுள்ளது. இத்தனைக்கும் குட்டிகளாக இருக்கும் போதே மேத்யூசன் சிங்கங்களை வளர்த்தும் அவற்றோடு பழகியும் வந்துள்ளார். சம்பவம் நடந்த போது அவர் மனைவியும் கூடவே இருந்துள்ளார். அவர் எவ்வளவோ முயன்றும் தன் கணவரை காப்பாற்ற முடியவில்லை.
இதையடுத்து சிங்கங்கள் தற்காலிக முகாமுக்கு மாற்றப்பட்டு அவற்றிற்கு ஏற்ற சூழலில் விடப்படும் என்று அக்குடும்பத்தினர் உறுதியளித்துள்ளனர். சிங்கத்தால் கொல்லப்பட்ட மேத்யூசனுக்கு மனைவி, நான்கு மகன்கள், ஆறு பேரன்கள் உள்ளனர். கணவரை சிங்கம் கொன்றுள்ளதால் தன் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியில் இருப்பதாக மேத்யூசன் மனைவி கூறியுள்ளார்.
AthibAn Tv