சமீபத்தில் பா.ஜ.,வில் இணைந்த முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலை மாநில துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் ஐ.பி.எஸ்., அதிகாரியாக இருந்த தமிழகத்தை சேர்ந்த அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்து சமீபத்தில் பா.ஜ.,வில் இணைந்தார். கோவை வந்த அவருக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக பா.ஜ., துணைத்தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் முருகன் தெரிவித்துள்ளார். அவரது பணி சிறக்க வாழ்த்துவதாகவும் கூறியுள்ளார்.
Thiru.K.Annamalai former IPS officer has been appointed as State Vice President by BJP State President Thiru.L.Murugan.@blsanthosh @JPNadda @Murugan_TNBJP @annamalai_k pic.twitter.com/qJtuCca9Av
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) August 29, 2020
AthibAn Tv