ரஷ்ய வான் பகுதியில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க விமானங்கள் விரட்டியடிக்கப்பட்டன
ரஷ்ய வான் பகுதியில் அத்துமீறி நுழைந்த 3 அமெரிக்க விமானங்களை வெளியேற்றியதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்,' ரஷ்ய எல்லைக்கு உட்பட்ட கருங்கடல் வான் பகுதியில் அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான போஸைடோன் ரக போர் விமானம் ஒன்றும், ஆர்.சி. 135 உளவு விமானம் ஒன்றும், எரிபொருள் நிரப்பும் விமானம் ஒன்றும் என 3 விமானங்கள் அத்துமீறி நுழைந்தன. அவற்றை ரஷ்யாவின் எஸ்யு 30 ரக ஜெட் விமானங்கள் வழிமறித்து, அமெரிக்க விமானங்கள் ரஷ்ய எல்லையை விட்டு வெளியேறும் வரை பின்தொடர்ந்தன' இவ்வாறு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
AthibAn Tv