இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 58 சதவீதத்தை தாண்டியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்த்தன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வேகமாக பரவி வருகிறது. நாளொன்றுக்கு 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 12 ஆயிரத்தை கடந்துள்ளது. 15, 731 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்த்தன் இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, ' நாட்டில் கொரோனா பாதித்தோரில் 85 சதவீதம் பேர் 8 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இதே போல் உயிரிழந்தவர்களில் 87 சதவீதம் பேர் அதே எட்டு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இந்தியாவில் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு விகிதம் 3 சதவீதத்தை நெருங்கியுள்ளது. இது மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் குறைவு. தொற்று எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கும் நாட்கள் 19 ஆக குறைந்துள்ன. இது ஊரடங்கிற்கு முன்பு 3 நாட்களாக இருந்தது.' இவ்வாறு அவர் தெரிவித்தார்
AthibAn Tv