Type Here to Get Search Results !

ஆசியான் சீனாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது

சீனாவின் ஆக்கிரமிப்புக்கு ஆசியான் ...

 தென் சீன கடலின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ள சீனாவுக்கு, 'ஆசியான்' எனப்படும் தெற்காசிய நாடுகளுக்கான ஒத்துழைப்பு அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

'கடந்த, 1982ல் உருவாக்கப்பட்ட ஐ.நா., சட்டத்தின்படியே, கடல் எல்லையை நிர்ணயிக்க வேண்டும்' என, அவை வலியுறுத்தியுள்ளன. ஒரு பக்கம் நிலப்பரப்புகளை ஆக்கிரமித்து வரும், நம் அண்டை நாடான சீனா, தென் சீனக் கடல் பகுதியிலும், ஆக்கிரமிப்பு செய்து வருகிறது. பழைய வரலாற்றை காண்பித்து, தென் சீனக் கடலின் பெரும்பகுதிக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது.

மேலும், அக் கடல் பகுதியில் உள்ள பல பவளப் பாறைகள், சிறிய தீவுகளை ஆக்கிரமித்து, தன் படைகளை நிறுத்தி வைத்துள்ளது. இது தொடர்பாக, வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே உட்பட பல நாடுகளுடன் பிரச்னை உள்ளது. இந்நிலையில், ஆசியான் எனப்படும் தெற்காசிய நாடுகள் ஒத்துழைப்புக்கான அமைப்பின் கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் நடைபெற்றது. இந்த அமைப்பில் உள்ள, 10 நாடுகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

அதன்பிறகு வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: சர்வதேச கடல் எல்லைகளில் மீன் பிடிப்பது, எண்ணெய் வளங்களை பயன்படுத்திக் கொள்வது உட்பட, நாடுகளுக்கான கடல் எல்லை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த, 1982ல் ஐ.நா., கடல் சட்ட ஒப்பந்தத்தில் இது தொடர்பாக தெளிவாக குறிப்பிடப்பட் டுள்ளது. அதன்படியே, தென் சீனக் கடலிலும், எல்லைகள் வரையறுக்கப்பட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom