சீன விவகாரத்தில் மோடியை யார் விமர்சித்தாலும், அவர்களுடைய வண்டவாளங்களை உடனே வெளியே கொண்டு வர வேண்டும் என, பா.ஜ.க தலைமை உத்தர விட்டுள்ளதாம். இதனால், 'எதிர்க்கட்சிகள், சில ஆண்டுகளுக்கு முன், இந்த விவகாரத்தில் என்ன பேசினர்; கட்சிகளுக்கு வெளிநாட்டிலிருந்து நிதி வருகிறதா; அப்படியானால் எவ்வளவு' என, பல விபரங்களை தோண்டி எடுக்க ஆரம்பித்துள்ளனர், பா.ஜ.கவினர். இதற்கு அரசு தரப்பிலிருந்து அனைத்து உதவிகளும் வழங்கப்படுகின்றன.
சீதாராம் யெச்சூரி தலைமையில் ஒன்று; நம்ம ஊர் டி.ராஜா தலைமையில் கொண்ட இன்னொன்று என, இரண்டு இடதுசாரி கட்சிகள் இயங்கி வருகின்றன. இவர்கள் பொதுவாகவே, சீனா, ரஷ்யா விவகாரங்களில் அதிகம் பேசாமல், அடக்கி வாசிப்பர். இப்போது இவர்கள், காங்கிரஸ் ராகுலைப் போல, மோடியை, சீன விவகாரத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
'காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த, 2004 முதல் 2014 வரை, நம் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு வெளிநாட்டிலிருந்து எவ்வளவு நிதி உதவி கிடைத்தது; குறிப்பாக, சீனா மற்றும் ரஷ்யாவிலிருந்து எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது' என, அனைத்து விபரங்களையும், மத்திய அரசு சேகரித்து விட்டது. இரண்டு இடதுசாரி கட்சிகளுக்கும், சீனாவிலிருந்து எவ்வளவு பணம் தரப்பட்டது என்பது, விரைவில் வெளியாக உள்ளது என, கமுக்கமாக சிரிக்கின்றனர், பா.ஜ.க தலைவர்கள்.
AthibAn Tv