ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் உடனான மோதலில், 3 பயங்கரவாதிகள் சுட்டுகொல்லப்பட்டனர்.
தெற்கு காஷ்மீரின் குல்கோஹர் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனையடுத்து பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையேயான துப்பாக்கிச்சண்டையில் 3 பயங்கரவாதிகளும் சுட்டுகொல்லப்பட்டனர்.
சம்பவ இடத்தில் இருந்து ஏ.கே 47 உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டது. கடந்த ஜூன் 26ம் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் சேவா உலர் பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில், மூன்று பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
AthibAn Tv