பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்த நாகர்கோவில் காசியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்தவர் காசி. இவர் பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்து வந்துள்ளார்.இவரிடம் ஏமாந்த பெண் மருத்துவர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்திய போது பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்து வந்தது தெரியவந்தது.தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு வடநேரே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்த நாகர்கோவிலை சேர்ந்த காசியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
AthibAn Tv