கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் புதிய வழிகாட்டுதல் மே 4 முதல் நடைமுறைக்கு வரும். என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் டிவிட்டரில் தெரிவித்துள்ளதாவது: ஊரடங்கு நிலை குறித்து விரிவான மறு ஆய்வு கூட்டத்தை இன்று மத்திய உள்துறை அமைச்சகம் நடத்தியது. இதில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஊரடங்கு நிலையால், மிகப்பெரிய லாபங்களும் முன்னேற்றங்களும் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த முன்னேற்றத்தை வீணாக்காமல்,ஏற்கனவே உள்ள ஊரடங்கு நடைமுறை விதிகளை மே.3 ஆம் தேதிவரை பின்பற்ற வேண்டும். மே 4 ம் தேதியிலிருந்து என்ன நடைமுறைகள் பின்பற்ற வேண்டும் என்பது குறித்து வரும் நாட்களில் அவ்வப்போது தெரிவிக்கப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
MHA had a comprehensive review meeting on the #lockdown situation. There has been tremendous gains & improvement in the situation because of the lockdown till now.— Spokesperson, Ministry of Home Affairs (@PIBHomeAffairs) April 29, 2020
To ensure that these gains are not squandered away, full strictness should be observed in the lockdown till 3rd May
AthibAn Tv