Type Here to Get Search Results !

தென்கொரியாவில் தீவிபத்து: 36 பேர் பலி

latest tamil news

தென்கொரிய தலைநகர் சியோல் அருகே கட்டுமான பணியில் இருந்த கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி 36 பேர் பலியாகி உள்ளனர்.

தென்கொரிய தலைநகர் சியோலுக்கு அருகே இச்சியோன் என்ற இடத்தில் ஒரு கட்டடத்தின் கட்டுமானப் பணியில் தொழிலாளர்கள் (ஏப்..29) புதனன்று,ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி 36 க்கும் அதிகமானோர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீயை 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். விபத்தில் சிக்கிய மேலும் 11 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை கூடும் என தெரிகிறது.

கட்டட பணியின் போது தரைதளத்தில் தொழிலாளர்கள் பணியில் இருந்த போது வெடிப்பு ஒன்று ஏற்பட்டு அதிலிருந்து தீ பரவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்கொரிய அதிபர் சம்பவ இடத்தில் மீட்பு பணிகளில் விரைவாக ஈடுபடுமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார். இதே இச்சியோன் நகரில் கடந்த 2008 ம் ஆண்டு ஏற்பட்ட தீவிபத்தில் 40 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom