Type Here to Get Search Results !

கினியா பிசாவ் பிரதமருக்கு கொரோனா..!

Aristides Gomes, Prime Minister of Guinea-Bissau at the United ...

கினியா பிசாவு நாட்டின் பிரதமர் நுனோ கோம்ஸ் நபியம் மற்றும் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 3 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா பிசாவ் இதுவரை 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மூத்த போலீஸ் கமிஷனர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் நபியம் மூன்றாவது இடத்தை பிடித்தார். இறுதியில் வெற்றியாளரான ஜனாதிபதி உமரோ சிசோகோ எம்பலோவால் பிப்ரவரி பிற்பகுதியில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கொரோனா தொற்று உறுதியான பிரதமர் நபியம், உள்துறை அமைச்சர் போட்சே கேண்டே மற்றும் 2 அமைச்சர்களும் தலைநகர் பிசாவுல் உள்ள ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் அன்டோனியோ டியூனா தெரிவித்தார். 4 பேரின் உடல்நிலை மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து தகவல்களை அளிக்காத டியூனா, நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom