அமேதியில் மீண்டும் போட்டியிட ராகுல் காந்திக்கு தைரியம் இல்லை என ராஜ்நாத் சிங் விமர்சித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தற்போது தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் பத்தனம்திட்டா தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் அனில் கே.அந்தோணியை ஆதரித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
“கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் தோல்வியடைந்த பிறகு, ராகுல் காந்திக்கு மீண்டும் அந்தத் தொகுதியில் போட்டியிட தைரியம் இல்லை. அதனால் அவர் உத்தரபிரதேசத்தில் இருந்து கேரளாவுக்கு மாறினார்.
ஆனால், அவரை நாடாளுமன்ற உறுப்பினராக ஏற்க மாட்டோம் என வயநாட்டு மக்கள் முடிவு செய்துள்ளதாகக் கேள்வி. நாட்டில் பல்வேறு விண்வெளி ஆய்வு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், காங்கிரஸ் கட்சியின் 'ராகுல்யன்' கடந்த 20 ஆண்டுகளாக செயல்படுத்தப்படாமல் உள்ளது.
ராஜ்நாத் சிங் கூறினார்.
AthibAn Tv