Type Here to Get Search Results !

முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உடல்நலக் குறைவால் இன்று காலமானார்....

முன்னாள் அமைச்சரும், திமுக இலக்கியக்குழு தலைவருமான இந்திரகுமாரி உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார்.

முன்னாள் அமைச்சரும், திமுக இலக்கிய அணி தலைவருமான இந்திரகுமாரி சிறுநீரக பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று மாலை அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 74.

இந்திரகுமாரி அ.தி.மு.க. 1991ல் நாட்ரம்பள்ளி தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் 1991 முதல் 1996 வரை சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார். தொட்டில் குழந்தை திட்டத்தின் வளர்ச்சிக்கு அவர் முக்கிய காரணம்.

2006ல் திமுகவில் இணைந்த இந்திரகுமாரிக்கு திமுக இலக்கிய அணி மாநிலத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. இவரது கணவர் பாபு வழக்கறிஞர். இவர்களுக்கு லேகா சந்திரசேகர் என்ற மகள் உள்ளார்.

இந்திரகுமாரின் உடல் அடையாறு காந்தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு திமுக நிர்வாகிகள் பலர் வந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதிச் சடங்கு நாளை (செவ்வாய்க்கிழமை) பெசன்ட்நகரில் நடைபெறுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom