Type Here to Get Search Results !

இந்தியாவில் பிரதமர் மோடி செய்து வரும் அபாரமான பணியை அமெரிக்காவில் சிறிதளவாவது செய்ய வேண்டும்... நிதி நிறுவனர் ஜேமி டிமோன்

 இந்தியாவில் பிரதமர் மோடி செய்து வரும் அபாரமான பணியை அமெரிக்காவில் சிறிதளவாவது செய்ய வேண்டும் என நிதி நிறுவனர் ஜேமி டிமோன் கூறியுள்ளார்.



This image has an empty alt attribute; its file name is %E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE.jpg

அமெரிக்காவின் மிகப்பெரிய நிதி நிறுவனமான ஜேபி மோர்கன் சேஸின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேமி டிமோன் நியூயார்க் நகரில் நடந்த பொருளாதார மன்ற மாநாட்டில் பேசினார். அப்போது அவர் பிரதமர் மோடியை வெகுவாக பாராட்டினார். ஒரு கட்டத்தில் இந்தியாவில் பிரதமர் மோடி ஆற்றி வரும் பணிகளைப் பாராட்டிய அவர், அமெரிக்காவிலும் அதைச் செய்ய வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் மேலும் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவிற்கு நம்பமுடியாத கல்வி முறையையும், உள்கட்டமைப்பையும் கொடுத்துள்ளார். இது உண்மையிலேயே நம்பமுடியாத வேலை. குறைந்த பட்சம் ஒரு சிறிய அளவு நமது அமெரிக்காவில் செய்யப்பட வேண்டும். பிரதமர் மோடி 40 கோடி இந்தியர்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளார். அவர்களுக்கு கழிப்பறை வசதி செய்து கொடுத்துள்ளார். இந்த பணிகளை பிரதமர் மோடி எப்படி செய்தார் என்பது பற்றி விரிவாக பேச வேண்டும்.

பிரதமர் மோடியால் இந்தியாவில் 70 கோடி பேர் வங்கி கணக்கு தொடங்கியுள்ளனர். அவர்கள் தங்கள் பணப் பரிவர்த்தனைகளை வங்கிகள் மூலம் மிக எளிதாக செய்கிறார்கள். மோடி என்ற மனிதனின் மன உறுதியால் இந்தியர்கள் ஒட்டுமொத்த தேசத்தையும் முன்னேற்றியுள்ளனர். பிரதமர் மோடி பழைய அதிகார வர்க்க நடைமுறைகளை கிழித்து எரித்து வருகிறார். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் அவர்களின் கைரேகை அல்லது கருவிழி (ஆதார்) மூலம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom