சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 29 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர், மராட்டியம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் நக்சலைட்கள் மற்றும் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இந்த நக்சலைட்டுகள் மற்றும் மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் பணியில் மாநில சிறப்பு சிறப்புப் படை போலீசாருடன் மத்திய ரிசர்வ் போலீசாரும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் கங்கர் மாவட்டம் ஷோதிபிதியா பகுதியில் உள்ள ஹபடோலா வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக எல்லை பாதுகாப்பு படையினருக்கும், மாவட்ட ரிசர்வ் போலீசாருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து இன்று மதியம் 2 மணியளவில் ஹபடோலா வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வனப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். உடனடியாக பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 29 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 3 வீரர்கள் காயமடைந்தனர். இதற்கிடையில், என்கவுண்டர் நடந்த இடத்தில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.
AthibAn Tv