Type Here to Get Search Results !

திமுக தூக்கத்தை இழந்துவிட்டது.... 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்... பேரணியில் பிரதமர் மோடி பேச்சு

 எனக்கு கிடைத்த ஆதரவால் திமுக தூக்கத்தை இழந்துவிட்டது. 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று சேலம் பேரணியில் பிரதமர் மோடி பேசினார்.

நாடாளுமன்ற தேர்தல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தை துவக்கி உள்ளனர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் பிரதமர் மோடி நேற்று கோவை வந்தார். கோவையில் நடந்த வாகன பேரணியில் பங்கேற்றார்.

இந்நிலையில் 2வது நாளாக பிரதமர் மோடி தமிழகம் திரும்பியுள்ளார். கேரளாவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சேலம் விமான நிலையம் வந்தடைந்த மோடி, கார் மூலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டிக்கு வந்தார்.

பிரதமர் மோடி திறந்த வாகனத்தில் விழா மேடைக்கு வந்தார். பொதுக்கூட்டத்தில் திரண்டிருந்த பாஜகவினர் மோடியை பார்த்ததும் உற்சாகமடைந்து மோடி.. மோடி என முழக்கங்களை எழுப்பினர். பின்னர் மோடி பொதுக்கூட்ட மேடைக்கு சென்றார். பாஜக பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், ஜிகே வாசன், ஏசி சண்முகம் உள்ளிட்ட தோழமை கட்சியினர் கலந்து கொண்டனர்.

அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: எனக்கு கிடைத்த ஆதரவால் திமுக தூக்கத்தை இழந்துவிட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும். கட்சிக்காக நேர்மையாக உழைத்தவர்களை கொன்றனர். ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கொல்லப்பட்டதை மறக்க முடியாது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை திமுக எப்படி இழிவுபடுத்தியது என்பதை சிந்தித்துப் பாருங்கள். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. இந்து மதத்தின் அகில இந்திய விமர்சனம் மற்ற மதங்களையோ மற்ற மதங்களையோ விமர்சிக்கவில்லை.

உலகின் பழமையான மொழி தமிழ். தமிழ் மொழியால் இந்தியா பெருமை கொள்கிறது. தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்வேன். இது எனது வாக்குறுதி,'' என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom